குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 378
பாலை - செவிலி கூற்று
பாலை - செவிலி கூற்று
பாடல் பின்னணி:
தலைவனுடன் தலைவி சென்றதை அறிந்த செவிலித்தாய், “என்மகள் போனவழி இன்பத்தைத் தருவதாக அமைக” என்று தெய்வத்தை வாழ்த்தியது.
ஞாயிறு காணாத மாண் நிழற் படீஇய,
மலைமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய்,
தண் மழை தலையவாகுக - நம் நீத்துச்
சுடர் வாய் நெடு வேற் காளையொடு
மட வா அரிவை போகிய சுரனே! . . . . [05]
மலைமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய்,
தண் மழை தலையவாகுக - நம் நீத்துச்
சுடர் வாய் நெடு வேற் காளையொடு
மட வா அரிவை போகிய சுரனே! . . . . [05]
- கயமனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
ஞாயிறு காயாது மரநிழற் பட்டு
மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்த்
தண்மழை தலையின் றாக நந்நீத்துச்
சுடர்வாய் நெடுவேற் காளையொடு
மடமா அரிவை போகிய சுரனே. . . . . [05]
மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்த்
தண்மழை தலையின் றாக நந்நீத்துச்
சுடர்வாய் நெடுவேற் காளையொடு
மடமா அரிவை போகிய சுரனே. . . . . [05]
பொருளுரை:
நம்மைப் பிரிந்து ஒளிபொருந்திய நெடிய வேலையுடைய தலைவனோடு மடப்பத்தையும் மாமையையும் உடைய தலைவிசென்ற பாலைநிலம் சூரியன் வெயில் வீசாமல் மரத்தின் நிழல் பொருந்தி மலையினிடத்தேயுள்ள சிறிய வழியின்கண் மணல் மிகப்பரவப்பெற்று குளிர்ந்த மழை பெய்ததாகுக.
முடிபு:
சுரன் காயாது நிழற்பட்டுத் தாஅய்த் தலையின்றாக.
கருத்து:
தலைவி சென்ற பாலைநிலம் இனியதாகுக.