குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 040

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர், பிரிவரெனக் கருதி அஞ்சிய தலைவியின் வேறுபாடு கண்டு தலைவன் கூறியது.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே . . . . [05]
- செம்புலப் பெயனீரார்.

பொருளுரை:

என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் எந்த விதத்தில் ஒருவரை ஒருவர் அறிந்திருந்தனர்? என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் எந்த முறையில் உறவினர்கள்? நானும் நீயும் எவ்வாறு ஒருவரை ஒருவர் முன்பு அறிந்திருந்தோம்? மழை நீர் செம்மண் நிலத்தில் விழுந்து கலந்தது போல் நம்முடைய அன்பான நெஞ்சங்கள் தாமாகவே ஒன்றுபட்டுள்ளன.

குறிப்பு:

ஏகாரமும் ஓகாரமும் அசை நிலைகள். இரா. இராகவையங்கார் உரை - பெயல் மேலே வானத்தும் செம்புலம் கீழே தரையினும் வேறு வேறு இடங்களில் வேறு வேறாகவுளவேனும் இவை தாமாக இயைந்து ஒரே செந்நீர் ஆயினாற்போல வேறு வேறிடத்து ஒருவர்க்கொருவர் உறவில்லாது வேறுபட்டிருந்தும் தம் நெஞ்சங்கள் தாமாகக் கலந்து அன்பால் ஒன்றாயின என்பதாம். உ. வே. சாமிநாதையர் உரை - யாய், ஞாய், தாய் என்னும் மூன்றும் முறையே என் தாய், நின் தாய், அவர் தாயென மூவிடத்தோடும் ஒட்டி வருவன. இம்மூன்றிடத்தும் ஒட்டப்பட்ட பெயர்கள் ஆறாம் வேற்றுமை முறையைக் குறித்து மேற் சொல்லியவாற்றான் தந்தை, நுந்தை, எந்தை எனவும், யாய், ஞாய், தாய் எனவும், தம்முன், நும்முன், எம்முன் எனவும், தம்பி, நும்பி, எம்பி எனவும் முதல்வனையும் ஈன்றாளையும் முன்பிறந்தானையும் பின்பிறந்தானையும் உணர்த்தும் பன்மைச் சொற்கள் (தொல்காப்பியம், எச்சவியல் 14) என்று தெய்வச்சிலையார் எழுதிய அரிய உரைப்பகுதியால் இது புலப்படும். அறிதும் (3) - உ. வே. சாமிநாதையர் உரை - எதிர்காலம் இறந்தகாலப் பொருளில் வந்தது, பொ. வே. சோமசுந்தரனார் உரை - எவ்வாறு அறிந்துள்ளோம்.

சொற்பொருள்:

யாயும் - என்னுடைய தாயும், ஞாயும் - உன்னுடைய தாயும், யார் ஆகியரோ - ஒருவரை ஒருவர் அறிந்திருந்தார்களா, எந்தையும்- என்னுடைய தந்தையும், நுந்தையும் - உன்னுடைய தந்தையும், எம்முறை - எந்த முறையில், கேளிர் - உறவினர்கள், யானும் நீயும் - நானும் நீயும், எவ்வழி - எவ்வாறு, அறிதும் - ஒருவரையொருவர் முன்பு அறிந்து கொண்டோம், செம்புலப் பெயல் நீர் போல - செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல, அன்புடை நெஞ்சம் - அன்பான நெஞ்சங்கள், தாம் - தாமாகவே, கலந்தனவே - கலந்துகொண்டனவே