குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 042

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

இரவில் வந்து தலைவியுடன் பழக வேண்டும் என்று விரும்பிய தலைவனை குறிப்பால் தோழி மறுத்தது.

காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென அருவி
விடரகத்து இயம்பும் நாட! எம்
தொடர்பும் தேயுமோ நின்வயினானே?
- கபிலர்.

பொருளுரை:

நடு இரவில் மின்னல் இடியுடன் பொழியும் பெருமழை பெய்ததால், நீர் பெருகி அதனால் பின்னாலும் அருவியாக மலை இடுக்குகளில் ஒலிக்கும் மலை நாடனே! காமம் நீங்குவதாக ஆயினும் இவள் உன்னிடம் கொண்ட தொடர்பு அழியுமா? அழியாது.

குறிப்பு:

தேயுமோ - ஓகாரம் எதிர்மறை, நின்வயினானே - ஏகாரம் அசை நிலை. காமம் (1) - உ. வே. சாமிநாதையர் உரை - இங்கே மெய்யுறு புணர்ச்சி, பொ. வே. சோமசுந்தரனார் உரை - ஈண்டு மெய்யுறு புணர்ச்சியை. கருவி மா மழை (2) - மின்னல் இடி தொகுதிகளையுடைய பெரிய மழை, இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய கரிய முகில்கள். உள்ளுறை - பொ. வே. சோமசுந்தரனார் உரை - யாவரும் உறங்கும் இடையிரவிலே மழை பெய்ததாயினும் அதனாற் பெருகிய அருவி, மழை உண்டென்று அறியாதாரையும் அறியக் காட்டி வழிநாள் முழைஞ்சுகளிலே முழங்கினாற் போன்று, நீ இரவின்கண் யாருமறியாது இவளைக் கூடி பிரிவாய் ஆகினும் அதனால் உண்டாக்கிய வேறுபாடு வழிநாள் பலரும் அறியத் தூற்றும் என்னும் உள்ளுறை கருதி ‘யாமத்துக் கருவி மாமழை வீழ்ந்தென அருவி விடரகத்து இயம்பும் நாட’ என்றாள்.

சொற்பொருள்:

காமம் ஒழிவது ஆயினும் - காமம் நீங்கியதாகினும், யாமத்து - நடு இரவில், கருவி - மின்னல் இடியுடன் மிகுதியாக, மாமழை வீழ்ந்தென அருவி - மாமழைப் பெய்ததால் அருவி, விடரகத்து இயம்பும் நாட - மலை இடுக்குகளில் ஒலிக்கும் நாடனே, எம் - எம்முடைய, தொடர்பும் தேயுமோ - தொடர்பும் குறையுமோ, நின்வயினானே - உன்னிடத்தில்