குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 180
பாலை - தோழி கூற்று
பாலை - தோழி கூற்று
பாடல் பின்னணி:
தலைவனது பிரிவினால் வருந்திய தலைவியை நோக்கி, “அவர்சென்ற விடத்தில் தாம் கருதிச் சென்ற பொருளைப் பெற்றனரோ; இலரோ; பெற்றனராயின் உடனே மீண்டு வருவார்” என்று தோழி கூறிவற்புறுத்தியது.
பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து,
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து,
எய்தினர் கொல்லோ பொருளே - அல்குல் . . . . [05]
அவ்வரி வாடத் துறந்தோர்
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே?
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து,
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து,
எய்தினர் கொல்லோ பொருளே - அல்குல் . . . . [05]
அவ்வரி வாடத் துறந்தோர்
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே?
- கச்சிப்பேட்டு நன்னாகையார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
பழூஉப்பல் அன்ன பருவுகிர்ப் பாவடி
இருங்களிற் றினநிரை யேந்தல் வரின்மாய்ந்
தறைமடி கரும்பின் கண்ணிடை யன்ன
பைத லொருகழை நீடிய சுரனிறந்து
எய்தினர் கொல்லோ பொருளே யல்குல் . . . . [05]
அவ்வரி வாடத் துறந்தோர்
வன்ப ராகத்தாஞ் சென்ற நாட்டே.
இருங்களிற் றினநிரை யேந்தல் வரின்மாய்ந்
தறைமடி கரும்பின் கண்ணிடை யன்ன
பைத லொருகழை நீடிய சுரனிறந்து
எய்தினர் கொல்லோ பொருளே யல்குல் . . . . [05]
அவ்வரி வாடத் துறந்தோர்
வன்ப ராகத்தாஞ் சென்ற நாட்டே.
பொருளுரை:
அல்குல்! அழகிய தேமல்வாடும்படி நம்மைப் பிரிந்த தலைவர் பேயின் பற்களைப் போன்ற பருத்த நகங்களை யுடைய பரவிய அடிகளைப்பெற்ற பெரியகளிற்றுத் திரளின் வரிசையினது தலைவன் வந்து கைக்கொள்ளின் அழிந்து பாத்தியின்கண் வீழ்ந்த கரும்புகளின் கணுக்களின் இடையே யுள்ள பகுதியைப் போன்ற வருந்துதலையுடைய ஒற்றைமூங்கில் ஓங்கிய பாலைநிலத்தைக் கடந்து வன்னெஞ்சினராக தாம் போனநாட்டினிடத்து பொருளை அடைந்தாரோ இல்லையோ?
முடிபு:
துறந்தோர் பொருள் எய்தினர் கொல்லோ?
கருத்து:
தலைவர்தாம் தேடிச் சென்ற பொருளைப் பெற்றாரோ, இலரோ?