குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 240

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, "நான் அவர் மலையை நோக்கி ஆற்றினேன்; மாலைக் காலத்தில் அது மறைகின்றது; ஆதலின் ஆற்றேனாயினேன்" என்று தலைவி கூறியது.

பனிப் புதல் இவர்ந்த பைங் கொடி அவரைக்
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர்
வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி,
வாடை வந்ததன் தலையும், நோய் பொர,
கண்டிசின் வாழி - தோழி! - தெண் திரைக் . . . . [05]

கடல் ஆழ் கலத்தின் தோன்றி,
மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே.
- கொல்லனழிசியார்.

பொருளுரை:

தோழி! குளிர்ச்சியை உடைய புதலின்கட் படர்ந்த பசிய கொடியாகிய அவரையினது கிளி மூக்கை ஒப்பாக உடைய ஒளியை வெளிப்படுத்தும் பல மலர்கள் காட்டுப் பூனையின் பல்லைப் போன்ற உருவத்தை உடைய முல்லை மலர்களோடு நெருங்கும்படி வாடை வீசுங்காலம் வந்ததற்கு மேலும் வருத்தம் என்னை அலைக்கும் வண்ணம் தலைவரது மணிகள் உண்டாகும்உயர்ந்த குன்று கடலில் ஆழ்கின்ற கப்பலைப் போலத் தோன்றி மாலைக் காலத்தில் மறையும்; இதனைக் காண்பாயாக.

குறிப்பு:

முடிபு: தோழி, கஞல வாடை வந்ததன்றலையும் பொரக் குன்று மறையும்; கண்டிசின்.

கருத்து:

அவர் மலையை நோக்கி ஆற்றினேன்; அது மறைவதால் ஆற்றேனாயினேன்.