குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 352

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்த காலத்தில் தோழியை நோக்கி, “தலைவர் பிரிவினால் மாலைக்காலம் எனக்கு நோய் தருகின்றது” என்பது படத் தலைவி கூறியது.

நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்தன்ன
கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை
அகல்இலைப் பலவின் சாரல் முன்னி,
பகல் உறைமுது மரம் புலம்பப் போகும்
சிறு புன் மாலை உண்மை . . . . [05]

அறிவேன் - தோழி! - அவர்க் காணா ஊங்கே.
- கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

பொருளுரை:

தோழி! ஆழமாகிய நீரின் கண் வளர்ந்த ஆம்பிலினது இலையின் புறத்தைப் போன்ற வளைந்த மெல்லிய சிறையை யுடையனவாகிய கூரிய நகங்களையுடைய வௌவால்கள் அகன்ற இலைகளையுடைய பலாமரங்களையுடைய மலைச்சாரலை நோக்கி பகற்காலத்தில் தாம் உறைந்த பழைய மரம் தனிக்கும்படி போகும்! சிறிய புல்லிய மாலைக்காலம் உளதாதலை அத்தலைவரைக் காணாத காலத்தில் உணர்வேன்.

முடிபு:

தோழி, அவர்காணாவூங்கு மாலையுண்மை அறிவேன்.

கருத்து:

தலைவன் பிரிந்த பின்னர் மாலைக்காலம் எனக்குத் துன்பத்தைத் தருகின்றது.