குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 161
குறிஞ்சி - தலைவி கூற்று
குறிஞ்சி - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தாய் உறங்காமல் விழித்திருந்தமையால் தலைவன் இரவில் வந்தும் அவனைக் காணுதற்கு இயலாத தலைவி மறுநாள் அவன் வந்து மறைவில் நிற்பதை யறிந்து, “நேற்று அன்னை விழித்திருந்தாள். தலைவன் வந்தா னென்பதை யான் உணர்ந்தும் பயனிலதாயிற்று” என்று தோழியை நோக்கிக் கூறியது.
பொழுதும் எல்லின்று; பெயலும் ஓவாது,
கழுது கண் பனிப்ப வீசும்; அதன் தலைப்
புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி,
'அன்னா!' என்னும், அன்னையும்: அன்னோ!
என் மலைந்தனன் கொல் தானே - தன் மலை . . . . [05]
ஆரம் நாறும் மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றனனே?
கழுது கண் பனிப்ப வீசும்; அதன் தலைப்
புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி,
'அன்னா!' என்னும், அன்னையும்: அன்னோ!
என் மலைந்தனன் கொல் தானே - தன் மலை . . . . [05]
ஆரம் நாறும் மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றனனே?
- நக்கீரனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
கழுதுகண் பனிப்ப வீசும் அதன்றலைப்
புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி
அன்னா வென்னும் அன்னையு மன்னோ
என்மலைந் தனன்கொல் தானே தன்மலை . . . . [05]
ஆரம் நாறு மார்பினன்
மாரி யானையின் வந்துநின் றனனே.
கழுதுகண் பனிப்ப வீசும் அதன்றலைப்
புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி
அன்னா வென்னும் அன்னையு மன்னோ
என்மலைந் தனன்கொல் தானே தன்மலை . . . . [05]
ஆரம் நாறு மார்பினன்
மாரி யானையின் வந்துநின் றனனே.
பொருளுரை:
தோழி! சூரியனும் விளக்கம் இலனாயினன்; மழையும் ஒழியாமல் பேய்கள் கண்ணை அடிக்கடி கொட்டி நடுங்கும்படி வேகமாகப் பெய்யும்; அதற்கு மேல் தாயும் புலிப்பற் கோத்த தாலியை யணிந்த மகனைத் தழுவி அன்னையே யென்று என்னை விளிப்பாள்; அப்பொழுது தனது மலையில் விளைந்த சந்தனம் மணக்கின்ற மார்பையுடைய தலைவன் மழையில் நனைந்த யானையைப் போல இவ்வீட்டுப்புறத்தே வந்து நின்றான்; அந்தோ! அவன் எதனைச் செய்ய மேற் கொண்டானோ!
முடிபு:
பொழுதும் எல்லின்று: பெயலும் வீசும்; அன்னையும் அன்னாவென்னும்; மார்பினன் வந்து நின்றனன்; என் மலைந்தனன் கொல்?
கருத்து:
நேற்றுக் காப்புமிகுதியால் தலைவனைக் காணப்பெற்றேனில்லை.