குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 030

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைபொருளின் பொருட்டுப் பிரிந்த காலத்தில் தலைவியது ஆற்றாமைக் காரணத்தைத் தோழி வினாவத் தலைவி, “இயல்பாக ஆற்றியிருக்கும்யான் தலைவனை மருவியதாகக் கண்ட பொய்க் கனாவினால் வருத்தமுறு வேனாயினேன்” என்று கூறியது.

கேட்டிசின் வாழி - தோழி! - அல்கல்,
பெய்வலாளன் மெய் உற மரீஇய
வாய்த் தகைப் பொய்க் கனா மருட்ட, ஏற்று எழுந்து,
அமளி தைவந்தனனே; குவளை
வண்டு படு மலரின் சாஅய்த் . . . . [05]

தமியேன்; மன்ற அளியேன் யானே!
- கச்சிப்பேட்டு நன்னாகையார்.

பொருளுரை:

தோழி! கேட்பாயாக; இராக் காலத்தில் பொய் கூறுதலில் வன்மை உடைய தலைவன் என் உடம்புடன் அணைதலைப் பொருந்திய மெய்போலும் தன்மையை உடைய பொய்யாகிய கனவு மயக்கத்தை உண்டாக்க துயிலுணர்ந்து எழுந்து தலைவனென எண்ணிப் படுக்கையைத் தடவினேன்; வண்டுகள் வீழ்ந்து உழக்கிய குவளை மலரைப் போல மெலிந்து நிச்சயமாக தனித்தவளாயினேன்; அத்தகைய யான் அளிக்கத் தக்கேன்

முடிபு:

தோழி, கேட்டிசின்; பொய்வலாளன் மரீஇய பொய்க்கனா மருட்ட எழுந்து அமளி தைவந்தனன்; தமியேன் அளியேன்!

கருத்து:

யான் தலைவனோடு அளவளாவியதாகக் கனாக் கண்டேன்.