குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 224
பாலை - தலைவி கூற்று
பாலை - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் பிரிந்த காலத்தில் ‘இவள் இறந்து படுவாளோ’ என்று கவலையுற்ற தோழி கேட்பத் தலைவி உரைத்தது.
சென்றோர் கொடுமை எற்றித் துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே, கூவல்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத் . . . . [05]
துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே.
சென்றோர் கொடுமை யெற்றித் துஞ்சா
நோயினு நோயா கின்றே கூவற்
குராலான் படுதுயர் இராவிற் கண்ட
உயர்திணை ஊமன் போலத் . . . . [05]
துயர்பொறுக் கல்லேன் தோழி நோய்க்கே.
பொருளுரை:
கிணற்றில் விழுந்த குரால் நிறப் பசுப் படும் துன்பத்தை இரவில் கண்ட ஊமை ஒருவன் அத் துயரத்தைக் கூற முடியாமல் துன்புறுவதைப் போல, எனக்காக வருந்தும் என் தோழி படும் துன்பத்தைத் தாங்க முடியாதவளாய் நான் இருக்கின்றேன். அத் துன்பம், பிளவுடைய வழிகளில் யா மரங்களையுடைய துன்பத்தை உடைய நீண்ட வழியில் என்னைப் பிரிந்துச் சென்ற தலைவரின் கொடுமையை எண்ணி உறங்காமல் இருக்கும் என்னுடைய துன்பத்தைக் காட்டிலும் மிகுந்த துன்பமாக உள்ளது.
குறிப்பு:
ஆகின்றே - ஏகாரம் அசை நிலை, நோய்க்கே - ஏகாரம் அசை நிலை. உயர்திணை ஊமன் (5) - உ. வே. சாமிநாதையர் உரை - ஊமன் என்பது அஃறிணையாகிய கோட்டானுக்கும் வருதலின் அதை விலக்க ‘உயர்திணை ஊமன்’ என்றாள். இது வெளிப்படை என்னும் இலக்கணத்தின் பாற்படும்.
சொற்பொருள்:
கவலை யாத்த - பிளவுடைய வழிகளில் யா மரங்களையுடைய, அவல நீள் இடைச் சென்றோர் - துன்பத்தை உடைய நீண்ட வழியில் சென்ற என் தலைவர், கொடுமை எற்றி - கொடுமையை எண்ணி, துஞ்சா நோயினும் - துயிலாமல் இருக்கும் என் துன்பத்தைக் காட்டிலும், நோய் ஆகின்றே - மிக்க துன்பமாகின்றது, கூவல் குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட - கிணற்றில் விழுந்த குரால் நிறப் பசு படும் துன்பத்தை இரவில் கண்ட, உயர்திணை ஊமன் போலத் துயர் பொறுக்கல்லேன் - ஊமை ஒருவன் அத் துயரத்தை கூற முடியாமல் தவித்துத் துன்புறுவதைப் போல நான் பொறுக்க முடியாமல் இருக்கின்றேன், தோழி நோய்க்கே - என் தோழியின் துன்ப நோய்க்கு