குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 095

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தனது வேறுபாடு கண்டு வினவிய தோழனிடம் தலைவன் கூறியது.

மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகை ததும்பும் பல் மலர் சாரல்
சிறுகுடி குறவன் பெரு தோள் குறு மகள்
நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே . . . . [05]
- கபிலர்.

பொருளுரை:

உயர்ந்த மலையிலிருந்து விழும் தூய வெள்ளை அருவி மலைக் குகைகளில் ஒலிக்கும் மலர்கள் நிறைந்த மலைச்சரிவில் உள்ள சிறுகுடியில் வாழும் குறவனின் பெரியத் தோளையுடைய, இள மகளினது நீர் போன்ற மென்மை, என் வலிமையைக் கெடச் செய்தது.

குறிப்பு:

வித்தன்றே - ஏகாரம் அசை நிலை. இரா. இராகவையங்கார் உரை - சிறுகுடிக் குறவன் குறமகள் என்றது தான் பெருங்குடி பெருமகனாதலைக் குறித்து. பெருந்தோள் கூறியது தன் பெருந்தோள் தழுவற்கு ஒப்புமை கருதி. உ. வே. சாமிநாதையர் உரை - பெருந்தோள் குறமகள் என்றது குறிப்பால் என் உரன் அவிதற்கு அத்தோளும் காரணமாயது என்பதை உணர்த்தியது. சாயல் - சாயல் மென்மை (தொல்காப்பியம், உரியியல் 29).

சொற்பொருள்:

மால்வரை - உயர்ந்த மலை, இழிதரும் - வடியும், தூவெள் அருவி - தூய வெள்ளை அருவி, கல்முகைத் - மலைக் குகைகள், ததும்பும் - நிறைந்திருக்கும், பன்மலர் - நிறைய மலர்கள், சாரல் - மலைச் சரிவுகள், சிறுகுடிக் குறவன் - சிறியக் குடியில் வாழும் மலைக் குறவன், பெருந்தோள் - பெரியத் தோள், குறுமகள் - இளம் மகள், நீரோரன்ன சாயல் - நீர் போன்ற மென்மை, தீயோரன்ன என் - தீயைப்போன்ற, உரன் வித்தன்றே - என் வலிமையைக் கெடச் செய்தது