குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 281
பாலை - தலைவி கூற்று
பாலை - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் பிரிந்தவிடத்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தினாளாக அவளை நோக்கி, "தலைவர் கொடிய பாலை நிலத்தைக் கடந்தனரோ என்னும் வருத்தத்தால் ஆற்றேனாயினேன்" என்று தலைவி கூறியது.
வெண் மணற் பொதுளிய பைங் கால் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு,
அத்த வேம்பின் அமலை வான் பூச்
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
குன்று தலைமணந்த கானம் . . . . [05]
சென்றனர் கொல்லோ - சேயிழை! - நமரே?
கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு,
அத்த வேம்பின் அமலை வான் பூச்
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
குன்று தலைமணந்த கானம் . . . . [05]
சென்றனர் கொல்லோ - சேயிழை! - நமரே?
- குடவாயிற் கீரத்தனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
வெண்மணற் பொதுளிய பைங்காற் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட்
டத்த வேம்பி னமலை வான்பூச்
சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக்
குன்றுதலை மணந்த கானம் . . . . [05]
சென்றனர் கொல்லோ சேயிழை நமரே.
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்தோட்
டத்த வேம்பி னமலை வான்பூச்
சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக்
குன்றுதலை மணந்த கானம் . . . . [05]
சென்றனர் கொல்லோ சேயிழை நமரே.
பொருளுரை:
சிவந்த பொன் அணியை உடையாய் நம் தலைவர் வெள்ளிய மணலின் கண்ணே தழைத்த பசிய அடியையும் கருக்கையும் திரட்சி யையும் உடைய பனையினது உச்சியில் உள்ள வெள்ளிய குருத்தோலையின் கண் வைத்த பாலை நிலத்தில் உள்ள வேப்ப மரத்தினது நெருக்கத்தை உடைய வெள்ளிய மலரை சுழித்தல் ஆர்ந்த மயிரை உடைய தலை விளங்கும்படி அணிந்து கொண்டு மலைகளோடு சேர்ந்த காட்டை கடந்து சென்றனரோ?
முடிபு:
சேயிழை, நமர் கானம் சென்றனர் கொல்?
கருத்து:
தலைவர் பாலையைக் கடந்து சென்றனரோ? இலரோ?