குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 249

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைவிடை வைத்துப் பிரியும் காலத்தில், தன்னை நோக்கி, "நீ ஆற்றும் ஆற்றல் உடையையோ?" என்ற தோழிக்கு, "அவர் மலையைக் கண்டு ஆற்றுவேன்" என்பது படத் தலைவி கூறியது.

இன மயில் அகவும் மரம் பயில் கானத்து,
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப,
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக்
குன்றம் நோக்கினென் - தோழி!
பண்டையற்றோ, கண்டிசின், நுதலே? . . . . [05]
- கபிலர்.

பொருளுரை:

தோழி! திரளாக உள்ள மயில்கள் ஆரவாரிக்கும் மரங்கள் செறிந்த காட்டிடத்தில் வெள்ளை முகத்தை உடைய கருங்குரங்கு குட்டிகளோடு குளிரால் நடுங்கும்படி ஒலிக்கின்ற மழை பொழிந்த மலைச் சாரலை உடைய அத் தலைவரது நாட்டில் உள்ள குன்றத்தை பார்த்தேன்; அதனால் ஒளி இழந்து பசப்பூர்ந்த என் நெற்றி பசப்பூராத பழைய தன்மை உடைய தாயிற்றோ? பார்ப்பாயாக.

முடிபு:

தோழி, அவர் நாட்டுக் குன்றம் தோக்கினென்; நுதல் பண்டையற்றோ? கண்டிசின்.

கருத்து:

தலைவருடைய குன்றத்தை நோக்கி ஆற்றி இருப்பேன்.