குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 052
குறிஞ்சி - தோழி கூற்று
குறிஞ்சி - தோழி கூற்று
பாடல் பின்னணி:
வரைவு மலிவு கேட்ட தலைவிக்குத் தோழி ‘முன்னாளில் நான் அறத்தொடு நின்றமையால் இது விளைந்தது’ எனக் கூறியது.
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே,
நரந்த நாறும் குவை இருங்கூந்தல்
நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை,
பரிந்தனென் அல்லனோ, இறை இறை யானே? . . . . [05]
சூர்நசைந் தனயையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
நிரந்திலங்கு வெண்பன் மடந்தை
பரிந்தனெ னல்லனோ விறையிறை யானே . . . . [05]
பொருளுரை:
நரந்த மலர்கள் கமழும் அடர்ந்த கருங்கூந்தலையும் வரிசையாக உள்ள வெள்ளை பற்களையுமுடைய மடந்தையே! தன்னிடத்தில் பொருந்திய ஆண் யானைகள் மிதித்ததால் உண்டாகிய பள்ளத்தில் உள்ள நீர் விளங்கும் மலையில் உறையும் கடவுளால் விரும்பப்பட்ட பண்பினையுடையாய் ஆகி நீ நடுங்குதல் கண்டு, நான் சிறிது சிறிதாக வருந்தினேன் அல்லவா?
குறிப்பு:
சூர் - பொ. வே. சோமசுந்தரனார் உரை - தீண்டி வருத்தும் தெய்வம், சூரர மகளிருமாம், உ. வே. சாமிநாதையர் உரை - சிலம்பிற் சூர் முகுகனுமாம், தமிழண்ணல் உரை - தெய்வ மகளிர். நடுங்கல் (2) - உ. வே. சாமிநாதையர் உரை - நீ நம் கற்புக்கு ஏதம் வருமோ என்று அஞ்சி நடுங்கினாள், காப்பு மிகுதியினாலும் தாயர் வெறியாட்டு எடுக்க விரும்பியதனாலும் தலைவி நடுங்கினாள், பொ. வே. சோமசுந்தரனார் உரை - தன் பொருட்டாகச் செவிலி எடுக்கும் வெறி பாடலால் கற்புக்கு ஏதங் விளையுங் கொல்! இந்நோய் நம்மால் வந்ததன்று என்று தெய்வத்தால் வந்தது போலும் எனத் தலைவன் கருதின், நம் நிலை என்னாகும் எனக் கருதி மெய் நடுங்கல். யானே - ஏகாரம் அசை நிலை.
சொற்பொருள்:
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் - தன்னிடத்தில் பொருந்திய ஆண் யானைகள் மிதித்ததால் உண்டாகிய பள்ளத்தில் உள்ள நீர் விளங்கும், சிலம்பில் - மலையில் உறையும், சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே - கடவுளால் விரும்பப்பட்ட பண்பினை உடையாய் ஆகி நடுங்குதல் கண்டு, நரந்த நாறும் குவை இருங்கூந்தல் - நரந்த மலர்கள் கமழும் அடர்ந்த கருங்கூந்தல் (நரந்தம் - நாரத்தம்பூ - நச்சினார்க்கினியர் உரை, குறிஞ்சிப்பாட்டு 94), நிரந்து இலங்கு வெண்பல் மடந்தை - வரிசையாக உள்ள வெள்ளை பற்களையுமுடைய பெண்ணே, பரிந்தனென் அல்லனோ இறை இறை யானே - நான் சிறிது சிறிதாக உனக்காக வருந்தினேன் அல்லவா