குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 037

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனது பிரிவால் வருந்தும் தலைவியிடம் தோழி கூறியது.

நசை பெரிது உடையர், நல்கலும் நல்குவர்,
பிடி பசி களைஇய பெருங்கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி, அவர் சென்ற ஆறே.
- சேர மன்னன் பாலைபாடிய பெருங்கடுங்கோ.

பொருளுரை:

தோழி! அவர் சென்ற வழியில், தன்னுடைய பெண் யானையின் பசியை நீக்க, பெரிய தும்பிக்கையையுடைய ஆண் யானை, மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரித்து தன்னுடைய அன்பைப் புலப்படுத்தும். உன் மீது மிகவும் விருப்பமுடையவர் தலைவர். நல்குதலையும் செய்வார்.

குறிப்பு:

குறுந்தொகை 37 - பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும், குறுந்தொகை 232 - உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல், குறுந்தொகை 255 - யாஅத்துப் பொரி அரை முழு முதல் உருவக் குத்தி மறங்கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச் சிறுகண் பெருநிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை, அகநானூறு 335 - யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை யாஅத்து, மலைபடுகடாம் 429 - உம்பல் அகைத்த ஒண் முறி யாவும். இறைச்சி: தமிழண்ணல் உரை - ஆண் யானை பிடியின் பசியை நீக்கும் காட்சி தலைவனது விருப்பத்தைத் தூண்டி, அவனை விரைவில் திரும்ப வைக்கும் எனும் இது இறைச்சி எனப்படும். களைஇய - சொல்லிசை அளபெடை, ஆறே - ஏகாரம் அசைநிலை, யாஅம் - இசைநிறை அளபெடை.

சொற்பொருள்:

நசை பெரிது உடையர் - தலைவர் மிகவும் விருப்பமுடையவர், நல்கலும் நல்குவர்- நல்குதலையும் செய்வார், பிடி பசி களைஇய - தன்னுடைய பெண் யானையின் பசியை நீக்க, பெருங்கை வேழம் - பெரிய தும்பிக்கையையுடைய ஆண் யானை, மென் சினை யாஅம் பொளிக்கும் - மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரிக்கும், அன்பின- அன்பைப் புலப்படுத்தும் இடமாக உள்ள, தோழி - தோழி, அவர் சென்ற ஆறே - அவர் சென்ற வழியில்