குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 103
நெய்தல் - தலைவி கூற்று
நெய்தல் - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
கூதிர்ப்பருவம் வந்தபின்பும் தலைவன் வாராமையினால் துன்புற்ற தலைவி தோழியை நோக்கி, “இவ்வாடைக் காலத்திலும் மீண்டு வாராராயினர்; இனி யான் பிரிவாற்றாது உயிர் நீங்குவேன்” என்று கூறியது.
கடும் புனல் தொகுத்த நடுங்கு அஞர் அள்ளல்
கவர் இதழ் அன்ன தூவி செவ்வாய்
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக
தூஉம் துவலை துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர் நம் காதலர் . . . . [05]
வாழேன் போல்வல் தோழி யானே.
கவர் இதழ் அன்ன தூவி செவ்வாய்
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக
தூஉம் துவலை துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர் நம் காதலர் . . . . [05]
வாழேன் போல்வல் தோழி யானே.
- வாயிலான் தேவனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
கடும்புன றொகுத்த நடுங்கஞ ரள்ளற்
கவரித ழன்ன தூவிச் செவ்வா
யிரைதேர் நாரைக் கெவ்வ மாகத்
தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும்
வாரார் போல்வர்நங் காதலர் . . . . [05]
வாழேன் போல்வ றோழி யானே.
கவரித ழன்ன தூவிச் செவ்வா
யிரைதேர் நாரைக் கெவ்வ மாகத்
தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும்
வாரார் போல்வர்நங் காதலர் . . . . [05]
வாழேன் போல்வ றோழி யானே.
பொருளுரை:
தோழி! மிக்க புனலால் தொகுக்கப்பட்ட நடுங்குதற்கு ஏதுவாகிய துன்பத்தைத் தரும் சேற்றினிடத்து மீனாகிய உணவைத் தேர்கின்ற முள்ளு முருங்கை மலரின் இதழைப் போன்ற மெல்லிய இறகையும் செம்மையாகிய அலகையும் உடைய நாரைக்கு துன்பம் உண்டாகும்படி தூவுகின்ற நீர்த்துளி களையுடைய பிரிந்தார் துயர்கூர்தற்குக் காரணமாகிய வாடைக்காற்றையுடைய கூதிர்க் காலத்திலும் பிரிந்து சென்ற நம்முடைய தலைவர் வருவாரல்லர்; யான் வாழ்வேனல்லேன்.
முடிபு:
தோழி, நம் காதலர் வாடைக்காலத்தும் வாரார்; யான் வாழேன்.
கருத்து:
தலைவர் இன்னும் வாராமையின் துன்பம் மிகப் பெற்றேன்.