குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 217
குறிஞ்சி - தோழி கூற்று
குறிஞ்சி - தோழி கூற்று
பாடல் பின்னணி:
‘பகற் குறியும் இரவுக் குறியும் இப்பொழுது பொருந்தா; என்செய்வேம்!' என்றதற்குத் தலைவன் உடன்போக்கை எண்ணி வெய்துயிர்த்தான்; அது நன்றேயென நான் கூறினேன்” எனத் தோழி தலைமகளுக்குக் கூறி உடன்போக்கை நயக்கச் செய்தது.
தினை கிளி கடிக எனின் பகலும் ஒல்லும்
இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல்,
‘யாங்குச் செய்வாம் எம் இடும்பை நோய்க்கு’ என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப், பிறிது செத்து,
ஓங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற . . . . [05]
ஐதே காமம், யானே
‘கழிமுதுக் குறைமையும்’ பழியும் என்றிசினே.
இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல்,
‘யாங்குச் செய்வாம் எம் இடும்பை நோய்க்கு’ என
ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப், பிறிது செத்து,
ஓங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற . . . . [05]
ஐதே காமம், யானே
‘கழிமுதுக் குறைமையும்’ பழியும் என்றிசினே.
- தங்கால் முடக்கொல்லனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
தினைகிளி கடிகெனிற் பகலும் ஒல்லும்
இரவுநீ வருதலி னூறு மஞ்சுவல்
யாங்குச் செய்வாமெம் இடும்பை நோய்க்கென
ஆங்கியான் கூறிய அனைத்திற்குப் பிறிதுசெத்
தோங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற . . . . [05]
ஐதே காமம் யானே
கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே.
இரவுநீ வருதலி னூறு மஞ்சுவல்
யாங்குச் செய்வாமெம் இடும்பை நோய்க்கென
ஆங்கியான் கூறிய அனைத்திற்குப் பிறிதுசெத்
தோங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற . . . . [05]
ஐதே காமம் யானே
கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே.
பொருளுரை:
தினையின்கண் படியும்கிளிகளை ஓட்டுவீர்களாக என்று கூறி எம் தாய் எம்மைப் போதரவிடின் பகற்காலம் நின்னோடு அளவளாவுதற்குப் பொருந்தும் அங்ஙனம் இன்மையின் இராக் காலத்து நீ வருதலினால் வழியின்கண் நேரும் துன்பங்களுக்கு அஞ்சுவேன் துன்பத்தைத் தரும் எமதுகாமநோயை நீக்குதற்கு எவ்வாறு பரிகாரம் செய்வேம் என்று அவ்வாறு யான் சொன்ன அதற்கு உயர்ந்த மலை நாட்டை உடைய தலைவன் வேறு ஒன்றை நினைத்து அந்நினைவினால் வெய்துயிர்த்தான்; காமநோய் நுண்ணியது; அவனது குறிப்பை உணர்ந்தயான் நீ நினைத்தவாறு செய்தல்மிக்க அறிவுடைமையும் பழிக்குக் காரணமும்ஆம் என்றேன்.
முடிபு:
என யான் கூறிய அனைத்திற்கு நாடன் உயிர்த்தோன்; காமம் ஐது; யான் முதுக்குறைமையும் பழியும் என்றிசின்.
கருத்து:
தலைவன் நின்னை உடன் அழைத்துச் செல்ல விரும்புகின்றான்.






