குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 079
பாலை - தலைவி கூற்று
பாலை - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைவனது பிரிவினால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “என்பாற் சொல்லின் நான் உடம்பட மாட்டேனென்னும் கருத்தால், சொல்லாமற் பிரிந்து சென்ற தலைவர் தாம் சென்ற ஊரிலேயே தங்கிவிட்டாரோ?” என்று கூறி வருந்தியது.
கான யானை தோல் நயந்து உண்ட
பொரி தாள் ஓமை வளி பொரு நெடு சினை
அலங்கல் உலுவை ஏறி ஒய் என
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அம் கடி சிறு ஊர்ச் . . . . [05]
சேந்தனர் கொல்லோ தாமே யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பல்
சொல்லாது அகறல் வல்லுவோரே.
பொரி தாள் ஓமை வளி பொரு நெடு சினை
அலங்கல் உலுவை ஏறி ஒய் என
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அம் கடி சிறு ஊர்ச் . . . . [05]
சேந்தனர் கொல்லோ தாமே யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பல்
சொல்லாது அகறல் வல்லுவோரே.
- குடவாயிற் கீரத்தனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
கான யானை தோனயந் துண்ட
பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை
அலங்க லுலுவை யேறி யொய்யெனப்
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்
அத்த நண்ணிய வங்கடிச் சீறூர்ச் . . . . [05]
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்
கொல்லே மென்ற தப்பற்
சொல்லா தகறல் வல்லு வோரே.
பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை
அலங்க லுலுவை யேறி யொய்யெனப்
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்
அத்த நண்ணிய வங்கடிச் சீறூர்ச் . . . . [05]
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்
கொல்லே மென்ற தப்பற்
சொல்லா தகறல் வல்லு வோரே.
பொருளுரை:
தோழி! யாம் தாம் பிரிவதற்குப் பொருந்தேமென்ற தவற்றினால் சொல்லாமற் செல்லுதலில் வன்மையுடையோராகிய தலைவர் காட்டு யானையால் பட்டை விரும்பி உண்ணப்பட்ட பொறந்த அடியையுடைய ஓமைமரத்தினது காற்று அடிக்கும் நெடிய கிளையினது அசைதலையுடைய வற்றற்கொம்பில் ஒய்யென்று தனிமையையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தும் குரலையுடையனவாகி ஆண்புறாக்கள் பெண்புறாக்களை அழைக்கும் பாலைநிலத்திற் பொருந்திய அழகிய குடிகளையுடைய சிற்றூரில் தங்கினரோ?
முடிபு:
சொல்லாதகறல் வல்லுவோர் சேந்தனர்கொல்?
கருத்து:
தலைவர் இனி மீளாரோ?