குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 188
முல்லை - தலைவி கூற்று
முல்லை - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததைக் கண்ட தலைவி, “கார்காலம் வந்துவிட்டது, இன்னும் தலைவர் வந்திலர்!” என, தோழிக்குக் கூறி வருந்தியது.
முகை முற்றினவே, முல்லை முல்லையொடு
தகை முற்றினவே தண் கார் வியன் புனம்,
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்,
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே.
தகை முற்றினவே தண் கார் வியன் புனம்,
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்,
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே.
- மதுரை அளக்கர் ஞாழர் மகனார் மள்ளனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
முகைமுற் றினவே முல்லை முல்லையொடு
தகைமுற் றினவே தண்கார் வியன்புனம்
வாலிழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்றென் மாணலங் குறித்தே.
தகைமுற் றினவே தண்கார் வியன்புனம்
வாலிழை நெகிழ்த்தோர் வாரார்
மாலை வந்தன்றென் மாணலங் குறித்தே.
பொருளுரை:
முல்லைக் கொடிகளில் அரும்புகள் முதிர்ந்தன. குளிர்ந்த கார்காலத்தை ஏற்ற அகன்ற முல்லை நிலங்கள் முல்லை மலர்களுடன் அழகு நிரம்பப் பெற்றன. என்னுடைய தூய அணிகலன்களை நெகிழச் செய்த என் தலைவர் இன்னும் வரவில்லை. ஆனால் மாலை நேரம் வந்துள்ளது, என்னுடைய மாட்சிமையுடைய அழகைக் கெடுக்க எண்ணி.
குறிப்பு:
முற்றினவே - ஏகாரம் அசை நிலை, குறித்தே - ஏகாரம் அசை நிலை.
சொற்பொருள்:
முகை முற்றினவே முல்லை - முல்லைக் கொடிகளில் அரும்புகள் முதிர்ந்தன, முல்லையொடு தகை முற்றினவே - முல்லை மலர்களுடன் அழகு நிரம்பப் பெற்றன, தண் கார் - குளிர்ந்த கார்காலம், வியன் புனம் - அகன்ற இடம், வால் இழை நெகிழ்த்தோர் - என்னுடைய தூய அணிகலன்களை நெகிழச் செய்தவர், வாரார் - இன்னும் வரவில்லை, மாலை வந்தன்று - மாலை நேரம் வந்தது, என் மாண் நலம் குறித்தே - என்னுடைய மாட்சிமையுடைய அழகைக் கெடுக்க எண்ணி