குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 136

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

‘காம நோயால் கலங்குவது நின் பெருமைக்குத் தகவன்று’ என்று இடித்துரைத்த தோழனிடம் தலைவன் கூறியது.

“காமம் காமம்” என்ப, காமம்
அணங்கும் பிணியும் அன்றே, நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே, யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே . . . . [05]
- மிளைப்பெருங் கந்தனார்.

பொருளுரை:

“காமம் காமம்” என என்று அதை அறியாதவர்கள் இகழ்ந்து கூறுவார்கள். காமம் வருத்தமும் நோயும் இல்லை. நுண்மையாகி மிகுதலும் குறைதலும் இல்லை. அதைக் கண்டு மகிழ்பவர்களைப் பெற்றால், காமமானது, யானை தழையை உண்டு அதனால் கொண்ட மதத்தைப் போல வெளிப்படும் தன்மையை உடையது.

குறிப்பு:

மிளைப்பெருங்கந்தனார் - குறுந்தொகை 204, தோழன் தலைவனிடம் சொன்னது - காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் முதைச் சுவல் கலித்த முற்றா இளம் புல் மூது ஆ தைவந்தாங்கு விருந்தே காமம் பெருந்தோளோயே. அன்றே - ஏகாரம் அசை நிலை, இன்றே - ஏகாரம் அசை நிலை, பெறினே - ஏகாரம் அசை நிலை. காமம் காமம் என்ப (1) - உ. வே. சாமிநாதையர் உரை - காமம் காமம் என்று உலகினர் அதைக் குறை கூறுவர், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - காமம் காமம் என்று உயர்த்திக் கூறுவர், தமிழண்ணல் உரை - காமம் காமம் என்று ஏதோ இழிவுடையது போல் பேசுவர், பொ. வே. சோமசுந்தரனார் உரை - உலகில் உள்ளோர் காமம் காமம் என்று தீயது ஒன்றிற்கு அஞ்சிக் கூறுவார் போலக் கூறுவர், இரா. இராகவையங்கார் உரை - காமம் காமம் என இழித்துக் கூறுவர்.

சொற்பொருள்:

“காமம் காமம்” என்ப - “காமம் காமம்” என என்று அதை அறியாதவர்கள் இகழ்ந்து கூறுவார்கள், காமம் அணங்கும் பிணியும் அன்றே - காமம் வருத்தமும் நோயும் இல்லை, நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே - நுண்மையாகி மிகுதலும் குறைதலும் இல்லை, யானை - யானை, குளகு மென்று ஆள் மதம் போல - தழையை உண்டு அதனால் கொண்ட மதத்தைப் போல, பாணியும் உடைத்து - வெளிப்படும் தன்மையும் உடையது, அது காணுநர்ப் பெறினே - அதைக் கண்டு மகிழ்பவர்களைப் பெற்றால்