குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 094
முல்லை - தலைவி கூற்று
முல்லை - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் மீள்வதாகக் கூறிச்சென்ற கார்ப்பருவம் வந்ததையறிந்த தோழி, ‘தலைவி இதுகண்டு ஆற்றாள்’ என வருந்தினாளாக அதனையறிந்த தலைவி, “இன்னும் கார்ப்பருவம் வரவில்லை; ஆயினும் மேகம் முழங்கு கின்றது; நான் ஆற்றுவேன்; தலைவர் இது கேட்டு வினைமுடியாமல் மீள்வரோவென்றே அஞ்சினேன்” என்று கூறியது.
பெரு தண் மாரி பேதை பித்திகத்து
அரும்பே முன்னும் மிக சிவந்தனவே
யானே மருள்வேன் தோழி பால் நாள்
இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும்
என் ஆகுவர் கொல் பிரிந்திசினோரே . . . . [05]
அருவி மா மலை தத்த
கருவி மா மழை சிலைதரும் குரலே.
அரும்பே முன்னும் மிக சிவந்தனவே
யானே மருள்வேன் தோழி பால் நாள்
இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும்
என் ஆகுவர் கொல் பிரிந்திசினோரே . . . . [05]
அருவி மா மலை தத்த
கருவி மா மழை சிலைதரும் குரலே.
- கதக்கண்ணனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்
தரும்பே முன்னு மிகச்சிவந் தனவே
யானே மருள்வேன் றோழி பானா
ளின்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்து
மென்னா குவர்கொல் பிரிந்திசி னோரே . . . . [05]
யருவி மாமலைத் தத்தக்
கருவி மாமழைச் சிலைதருங் குரலே.
தரும்பே முன்னு மிகச்சிவந் தனவே
யானே மருள்வேன் றோழி பானா
ளின்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்து
மென்னா குவர்கொல் பிரிந்திசி னோரே . . . . [05]
யருவி மாமலைத் தத்தக்
கருவி மாமழைச் சிலைதருங் குரலே.
பொருளுரை:
தோழி! பெரிய தண்மை யையுடைய மழைக்காலத்துக்குரிய அறிவின்மையையுடைய பிச்சியின் அரும்புகள் தாம் சிவக்க வேண்டிய காலத்திற்கு முன்பே மிகச் சிவந்தன; அவற்றைக் கண்டு இது கார்ப் பருவமென்று நானா மயங்குவேன்? மயங்கேன்; ஆயினும் என்னைப் பிரிந்திருப்பவராகிய இன்னும் என்பால்வந்து சேராமல் தனித்து இருக்கும் தலைவர் அருவியானது பெரிய மலையிலே தத்தி வீழும்படி தொகுதியாகிய பெரிய மேகத்தினது முழங்கும் ஓசையை நடு இரவில் கேட்டால் தாம் முன்னரே பிரிவினால் வருந்துவதன்றி மீட்டும் எந்த நிலையை உடையவராவரோ!
முடிபு:
தோழி, பித்திகத் தரும்பு மிகச் சிவந்தன; யானே மருள்வேன்? பிரிந்திசினோர், இன்னுந் தமியர் மழைக்குரலைக் கேட்பின் என்னாகுவர்!
கருத்து:
தலைவர் இம்மேக முழக்கத்தைக் கேட்டு வினைக்குறை முடியாமல் மீள்வாரோ?