குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 236

நெய்தல் - தோழி கூற்று


நெய்தல் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

வரைவிடை வைத்துத் தலைவியைப் பிரிந்து செல்ல எண்ணியதலைவன், "இவளை வருந்தாது பாதுகாப்பாயாக" என்று தோழிக்குக்கூற, அவள், "இவளைப் பிரிந்தால் என்றும் பிரிந்தே இருக்க வேண்டும்; அங்ஙனம் செய்வாயேல் நீ உண்ட நலனைத் தந்து செல்வாயாக" என்றுகூறு முகத்தால் அவன் பிரிவைத் தடுத்தது.

விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ
நொந்தனை ஆயின், தந்தனை சென்மோ!
குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை
நின்ற புன்னை நிலம் தோய் படு சினை
வம்ப நாரை சேக்கும் . . . . [05]

தண் கடற் சேர்ப்ப! - நீ உண்ட என் நலனே.
- நரிவெரூஉத் தலையார்.

பொருளுரை:

குன்றைப் போன்ற குவிதலை உடைய மணல் அடைந்த கரையினிடத்து வளர்ந்து நின்ற புன்னை மரத்தினது நிலத்தைத் தோய்த்த தாழ்ந்த கிளையில் புதியநாரை தங்கும் தண்ணிய கடற்கரையை உடைய தலைவ இவளை நீ கைவிட்டாய் என விடுக்கும் காலம் வருவதாக! அதற்கு நீ உடம்படுவாயாயின் நீ நுகர்ந்த என் பெண்மை நலத்தை தந்து செல்வாயாக.

முடிபு:

சேர்ப்ப, நாள் வருக; நேர்ந்தனையாயின் நலன் தந்துசென்மோ.

கருத்து:

இவளைப் பிரிந்து செல்லல் தகாது.