குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 314

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்த விடத்து வேறுபட்ட தலைவியை நோக்கி, “நீ ஆற்றல் வேண்டும்" என்று வற்புறுத்திய தோழிக்கு, "அவர் கூறிய பருவம் வந்தது; அவர் வந்திலர்" என்று தலைவி வருந்திக் கூறியது.

சேயுயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல்
தண்குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப,
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும்,
வாரார் வாழி! - தோழி! - வரூஉம்
இன் உறல் இள முலை ஞெமுங்க . . . . [05]

இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே.
- பேரிசாத்தனார்.

பொருளுரை:

தோழி! துன்பத்தைச் செய்யும் இடங்களையுடைய பாலை நிலத்தைக் கடந்து சென்றவர் நெடுந்தூரம் உயர்ந்த வானத்தின்கண் நீர்மிக்க நிறைந்த கருப்பத்தையுடைய தண்ணிய முழக்கத்தையுடைய மேகம் ஒள்ளிய மின்னலின் ஒளிவிட்டு விளங்க மழைபெய்து இருண்ட தனிமையைக் கொண்ட மாலைக்காலத்திலும் வளருகின்ற மின்னுதல் மிக்க இளைய முலைகள் அழுந்தும்படி தழுவுதற்கு வாராராயினார்.

முடிபு:

தோழி, சுரனிறந்தோர் ஞெமுங்க மாலையும் வாரார்.

கருத்து:

கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்திலர்.