குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 371

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் வேறுபட்ட தலைவியை நோக்கி, “நீ வேறுபடாமல் ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்கு, “யான் என்செய்கேன்! யான் ஆற்றியிருப்பினும் காமம்பெரிதாகலின் என் வரைத்தன்றி வேறுபாடு உண்டாயது” என்று தலைவி கூறியது.

கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும்,
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு,
மருவேன் - தோழி - அது காமமோ பெரிதே.
- உறையூர் முதுகூற்றனார்.

பொருளுரை:

தோழி! மேகங்கள் பொருந்துகின்ற மலைப்பக்கத்தில் மலைநெல்லை விதைத்து அருவியினாலே விளைக்கின்ற நாட்டையுடைய தலைவனால் என்கைகளில் உள்ள வளைகள் நெகிழ்தலையும் மெய்யின்கண்ணே பசலை பரத்தலையும் பெறேன்; ஆயினும் அக்காமம் பெரிது!

முடிபு:

தோழி, நாடனொடு வளை நெகிழ்தலும் பசப்பூர்தலும் மருவேன்; காமம் பெரிது.

கருத்து:

காமம் என்வரைத்தன்றி மிக்கது.