குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 039
பாலை - தலைவி கூற்று
பாலை - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
பிரிவிடை ஆற்றல் வேண்டும் என்ற தோழியிடம் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைவி கூறியது.
வெந்திறல் கடு வளி பொங்கர் போந்தென
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்ப, நம்
முலை இடை முனிநர் சென்ற ஆறே.
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை அருஞ்சுரம் என்ப, நம்
முலை இடை முனிநர் சென்ற ஆறே.
- ஔவையார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென
நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும்
மலையுடை யருஞ்சுர மென்பநம்
முலையிடை முனிநர் சென்ற வாறே.
நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும்
மலையுடை யருஞ்சுர மென்பநம்
முலையிடை முனிநர் சென்ற வாறே.
பொருளுரை:
வெப்பமுடைய வலிமையான காற்று பொங்கி வந்ததால் நெற்றாக விளைந்த வாகை மரத்தின் முற்றிய வற்றல் ஒலிக்கும் இடமாகிய மலைகளையுடைய கடத்தற்கரிய பாலை நிலம் என்பார்கள், என் முலைஇடத்து துயிலுதலை வெறுத்துப் பொருள் ஈட்டச் சென்ற தலைவர் போன வழி.
குறிப்பு:
ஆறே - ஏகாரம் அசைநிலை. பொ. வே. சோமசுந்தரனார் உரை - மலையுடை அருஞ்சுரம் என்பதால் இது குறிஞ்சி திரிந்த பாலை நிலம் என்க.
சொற்பொருள்:
வெந்திறல் கடு வளி பொங்கர் போந்தென - வெப்பமுடைய வலிமையான காற்று பொங்கி வந்ததால், நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் - நெற்றாக விளைந்த வாகை மரத்தின் முற்றிய வற்றல் ஒலிக்கும், மலையுடை அருஞ்சுரம் என்ப - மலைகளையுடைய கடத்தற்கரிய பாலை நிலம் என்பார்கள், நம் முலை இடை முனிநர் சென்ற ஆறே - என் முலைஇடத்து துயிலுதலை வெறுத்துப் பொருள் ஈட்டச் சென்ற தலைவர் போன வழி