குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 210

முல்லை - தோழி கூற்று


முல்லை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவியைப் பிரிந்து சென்றிருந்த தலைவன் மீண்டும் வந்தடைந்தான். தலைவிக்கு துணையாக இருந்த தோழிக்கு நன்றி கூறுகின்றான். அப்பொழுது அவள் இவ்வாறு உரைக்கின்றாள்.

திண் தேர் நள்ளி கானத்து, அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு,
ஏழு கலத்து ஏந்தினும், சிறிது, என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு . . . . [05]

விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.
- காக்கை பாடினியார் நச்செள்ளையார்.

பொருளுரை:

திண்மையான தேரையுடைய நள்ளியின் காட்டில் உள்ள இடையர்களின் பல பசுக்கள் கொடுத்த நெய்யுடன், தொண்டி என்ற ஊர் முழுவதும் நன்கு விளைந்த நெல்லினால் ஆக்கப்பட்ட சோற்றை, ஏழு கிண்ணங்களில் தூக்கிக் கொடுத்தாலும், என்னுடைய தோழியின் பெரிய தோளை நெகிழச் செய்த துன்பம் நீங்குவதற்கு, நீ வரும்படி கரைந்த காக்கைக்குக் கொடுக்கும் பலி, சிறிதே.

குறிப்பு:

பலி (6) - பலியே - ஏகாரம் அசை நிலை. நள்ளி கடையெழு வள்ளல்களில் ஒருவன். ஐங்குறுநூறு 391 - மறு இல் தூவிச் சிறு கருங்காக்கை! அன்புடை மரபின், நின் கிளையோடு ஆரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ வெஞ்சின விறல் வேல் காளையொடு அம் சில் ஓதியை வரக் கரைந்தீமே. உ. வே. சாமிநாதையர் உரை - காக்கைக்கு இடும் உணவைப் பலி என்றல் மரபு.

சொற்பொருள்:

திண் தேர் நள்ளி - திண்மையான தேரையுடைய நள்ளி, கானத்து - காட்டில் உள்ள, அண்டர் - இடையர், பல் ஆ பயந்த - பல பசுக்கள் கொடுத்த, நெய்யின் - நெய்யுடன், தொண்டி முழுதுடன் விளைந்த - தொண்டி என்ற ஊர் முழுதுடன் நன்கு விளைந்த, வெண்ணெல் வெஞ்சோறு - வெண்ணெல் அரிசியால் ஆக்கிய வெம்மையான சோறு, ஏழு கலத்து ஏந்தினும் - ஏழு கிண்ணங்களில் தூக்கிக் கொடுத்தாலும், சிறிது - சிறிது, என் தோழி பெருந்தோள் நெகிழ்த்த - என்னுடைய தோழியின் பெரிய தோளை நெகிழச் செய்த, செல்லற்கு - நீக்கும் பொருட்டு, விருந்து வர - விருந்தினர் வரும்படி, நீ விருந்தினராக வரும்படி, கரைந்த காக்கையது பலியே - கரையும் காக்கைக்குக் கொடுக்கும் பலி (உணவு)