குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 073
குறிஞ்சி - தோழி கூற்று
குறிஞ்சி - தோழி கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் பகலில் வருவதை மறுத்துரைத்து இரவில் வரச் செய்து பின்னர் அதனையும் மறுத்து தோழி, வரைந்து கொள்ளும் பொருட்டு அங்ஙனம் செய்வதன் இன்றியமையாமையைத் தலைவிக்குக் கூறியது.
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போகிய
ஒன்று மொழிக் கோசர் போல
வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே . . . . [05]
அழியல் வாழி தோழி நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போகிய
ஒன்று மொழிக் கோசர் போல
வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே . . . . [05]
- பரணர்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று ஞாட்பிற் போகிய
ஒன்றுமொழி்க் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே . . . . [05]
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று ஞாட்பிற் போகிய
ஒன்றுமொழி்க் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே . . . . [05]
பொருளுரை:
தோழி! தலைவனது மார்பையே நீ விரும்புதலுடையை; நன்னனது காவன்மரமாகிய நறிய மாமரத்தை வெட்டி அவனது நாட்டினுட்புக்க வஞ்சினத்தையுடைய கோசரைப் போல சிறிதளவு. வன்கண்மையையுடைய ஆராய்ச்சியும் வேண்டும.; அதன் பொருட்டு வருந்தற்க.
முடிபு:
தோழி, நீ மகிழ் நன்மார்பே வெய்யை; சிறிது சூழ்ச்சியும் வேண்டும்; அழியல்.
கருத்து:
பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்தால் தலைவன் விரைவில் மணந்து கொள்வான்.