குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 012

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவி தலைவனது பிரிவை ஆற்றும் வன்மையிலள் ஆயினாள் என்று கவலையுற்ற தோழி கேட்கும்படி தலைவி சொல்லியது.

எறும்பி அளையின் குறும்பல் சுனைய,
உலைக் கல் அன்ன பாறை ஏறிக்
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப, அவர் சென்ற ஆறே!
அது மற்று அவலம் கொள்ளாது, . . . . [05]

நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே.
- ஓதலாந்தையார்.

பொருளுரை:

அவர் சென்ற பாலை நிலத்தில் எறும்பு அளைகள் போன்ற பாதைகளும், சிறிய பல சுனைகளும், கொல்லனின் உலைகள் போல் (சூடான) உள்ள பாறைகளில் ஏறி வளைந்த வில்லையுடைய எயினர்கள் தங்கள் அம்புகளைக் கூர்மையாக்கும் வழிகளும் உண்டு எனக் கூறுகின்றனர். அதுப்பற்றி வருந்தாது, பழிச் சொற்களைக் கூறுகின்றது, ஆரவாரமுடைய இந்த ஊர்.

குறிப்பு:

இரா. இராகவையங்கார் உரை - அவர் சென்ற ஆற்றில் உணவளிப்பது எறும்பியளை, நீர் தருவது அறுநீர்ச்சுனை, உறைவிடம் உலைக்கலன்ன பாறை, வாழ்வோர் பகழி மாய்க்கும் கொடுவில் எயினர் என அவர் சென்ற ஆற்றின் இடையூறெல்லாம் தெரியக் கூறினாள். ஊர் - உ. வே. சாமிநாதையர் உரை - ஊர் என்றது தோழியை. தோழியை ஊரென்றல் மரபு. அகநானூறு 377 - சிறு புல் உணவு நெறி பட மறுகி நுண் பல் எறும்பி கொண்டளைச் செறித்த வித்தா வல்சி வீங்கு சிலை மறவர். தோழியை ஓரென்றல் மரபு. மற்று, ஏகாரங்கள் - அசை நிலைகள்.

சொற்பொருள்:

எறும்பி அளையின் - எறும்பின் அளைகளைப்போல் (இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), குறும்பல் சுனைய - சிறிய பல சுனைகள், உலைக்கல் அன்ன - கொல்லனது உலைக்கல்லைப் போல் வெட்பமுடைய, பாறை ஏறி - பாறை மீது ஏறி, கொடு வில் எயினர் - வளைந்த வில்லையுடைய எயினர்கள், கொடூர வில்லையுடைய எயினர்கள் (பாலை நிலத்தில் பிறரை துன்புறுத்துவோர்), பகழி மாய்க்கும் - அம்புகளைத் தீட்டும், கவலைத்து - கடினமான வளைந்தப் பாதைகளில், என்பவர் - எனக் கூறுகின்றனர், சென்ற ஆறே - சென்ற வழி, அது மற்று அவலம் கொள்ளாது - என்னுடைய துன்பத்தை அறியாது (மற்று - அசைநிலை), நொதுமல் கழறும் - பழிக்கும் சொற்கள் கூறும், இவ் - இந்த, அழுங்கல் ஊரே - ஆரவாரமுடைய ஊர்