குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 086
குறிஞ்சி - தலைவி கூற்று
குறிஞ்சி - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைவனது பிரிவைத் தலைவி ஆற்றாளெனக் கவலை உற்ற தோழியை நோக்கி, “தலைவர் என்னோடு இருந்து இன்புறுதற்கு உரிய பொழுதாகிய இக்கூதிர் யாமத்திலே தனிமைத்துன்பத்தை மிகுதிப்படுத்தும் ஆன்மணிக்குரலைக் கேட்பார் வேறு யாருளர்? நான் ஒருத்தியேயன்றோ?” என்று தலைவி கூறியது.
சிறை பனி உடைத்த செ அரி மழைக் கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலைக்கலங்கி
பிறரும் கேட்குநர் உளர்கொல் உறை சிறந்து
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும் . . . . [05]
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே.
பொறை அரு நோயொடு புலம்பு அலைக்கலங்கி
பிறரும் கேட்குநர் உளர்கொல் உறை சிறந்து
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும் . . . . [05]
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே.
- வெண்கொற்றனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
சிறைபனி யுடைத்த சேயரி மழைக்கட்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குந ருளர்கொ லுறைசிறந்
தூதை தூற்றுங் கூதிர் யாமத்
தானுளம் புலம்புதொ றுளம்பும் . . . . [05]
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குந ருளர்கொ லுறைசிறந்
தூதை தூற்றுங் கூதிர் யாமத்
தானுளம் புலம்புதொ றுளம்பும் . . . . [05]
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.
பொருளுரை:
தோழி! மழைத்துளி மிக்கு வாடைக்காற்று வீசித் தூவுகின்ற கூதிர்ப் பருவத்தின் நள்ளிரவில் எருதானது ஈ ஒலிக்குந்தோறும் அலைகின்ற நாவினால் முழங்குகின்ற கொடிய மணியின் மெல்லிய ஓசையை தடுக்கப்பட்ட நீர் உடைந்து துளித் துளியாக விழுகின்ற செம்மையான அரிகளையும் குளிர்ச்சியையுமுடைய கண்ணோடும் பொறுத்தற்கரிய காமநோயோடும் தனிமை வருத்துதலாற் கலங்கி கேட்டு வருந்துவார் என்னையன்றிப் பிறமகளிரும் உள்ளாரோ?
முடிபு:
கூதிர்யாமத்து ஆன் உளம்பும் மணியின் குரலைக் கேட்குநர் பிறகும் உளர் கொல்?
கருத்து:
தலைவர் உடனிருத்தற்குரிய இப்பருவத்தில் யானொருத் தியே தனிமைத் துன்பத்தை உடையேன் ஆயினேன்.