குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 020

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனின் பிரிவை உணர்த்திய தோழியை நோக்கி, தலைவி இவ்வாறு கூறினாள்.

அருளும் அன்பும் நீக்கித், துணை துறந்து,
பொருள் வயின் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக,
மடவம் ஆக மடந்தை நாமே.
- கோப்பெருஞ்சோழன்.

பொருளுரை:

அன்பையும் அருளையும் விலக்கி விட்டு, துணையான என்னை விட்டு விலகி, பொருளுக்காகச் செல்லும் தலைவர் அறிவுடையவர் என்றால், அவர் அறிவுடையவராகவே இருக்கட்டும். நான் மடமையானவளாகவே இருந்து விட்டு போகின்றேன்.

குறிப்பு:

ஏகாரம் - அசை நிலை.

சொற்பொருள்:

அருளும் அன்பும் நீக்கி - அன்பையும் அருளையும் நீக்கி, துணை துறந்து - துணையான என்னை மறந்து, பொருள் வயின் பிரிவோர் - செல்வம் சேர்க்க பிரியும் தலைவர், உரவோர் ஆயின் - அறிவுடையவர் என்றால், உரவோர் உரவோர் ஆக - அவர் அறிவுடையவராக இருக்கட்டும், மடவம் ஆக மடந்தை நாமே - நான் மடமையானவளாக இருந்து விட்டு போகின்றேன்