குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 167

முல்லை - செவிலித்தாய் கூற்று


முல்லை - செவிலித்தாய் கூற்று

பாடல் பின்னணி:

தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த செவிலி நற்றாயினிடத்தில், “தலைவி தலைவன் உவக்கும்படி அட்டு உண்பிக்கின்றாள்” என்று கூறியது.

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்,
குவளை உண்கண் குய் புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்,
இனிதெனக் கணவன் உண்டலின் . . . . [05]

நுண்ணிதின் மகிழ்ந்தன்று, ஒண்ணுதல் முகனே.
- கூடலூர் கிழார்.

பொருளுரை:

முற்றிய தயிரைப் பிசைந்த, காந்தள் மலரின் இதழைப் போன்ற தன் மெல்லிய விரல்களைத் துடைத்துக் கொண்ட ஆடையைத் துவைக்காமல் உடுத்திக் கொண்டு, குவளை மலரைப் போன்ற மையிட்டக் கண்களில் தாளிப்பின் புகை மணக்க, தானே துழவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பை இனிதெனத் தன் தலைவன் உண்பதால், நுண்ணிதாக மலர்ந்தது தலைவியின் முகம்.

குறிப்பு:

முல்லைப்பாட்டு 95 - கோடல் குவி முகை அங்கை அவிழ, குறுந்தொகை 167 - காந்தள் மெல்விரல், பரிபாடல் 19 - கை போல் பூத்த கமழ் குலைக் காந்தள், பொருநராற்றுப்படை 33 - காந்தள் மெல் விரல், புறநானூறு 144 - காந்தள் முகை புரை விரலின். கழாஅது - இசை நிறை அளபெடை, உடீஇ - சொல்லிசை அளபெடை, ஒண்ணுதல் - அன்மொழித்தொகை, முகன்: முகம் என்பதன் போலி, முகனே - ஏகாரம் அசை நிலை. விரல் கழுவுறு கலிங்கம் (1-2) - உ. வே. சாமிநாதையர் உரை - விரலை துடைத்துக் கொண்ட ஆடையை, பொ. வே. சோமசுந்தரனார் உரை - தோய்த்துத் தூய்மை செய்யப்பட்ட ஆடை. விரல் கழாஅது கழுவுறு கலிங்கத்தை உடுத்தென்க. விரலைக் கழுவாமலே நெகிழ்ந்த ஆடையை உடுத்திக் கொண்டு தாளிப்பாயாயினள். கமழ (3) - உ.வே.சா உரையில் இவ்வாறு உள்ளது. பொ. வே. சோமசுந்தரனார் உரையில் ‘கழும’ என உள்ளது. கண்ணிற் புகை நிறைய என அதன் பொருள் உள்ளது

சொற்பொருள்:

முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் - முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லிய விரலை, கழுவுறு கலிங்கம் - துடைத்துக் கொண்ட ஆடையை, கழாஅது உடீஇ - துவைக்காமல் உடுத்திக் கொண்டு, குவளை உண்கண் குய் புகை கழும - குவளை மலரைப் போன்ற மையிட்டு கண்களில் தாளிப்பின் புகை மணக்க, தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர் இனிதெனக் கணவன் உண்டலின் - தானே துழவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பை தன் தலைவன் இனிதென உண்பதால், நுண்ணிதின் மகிழ்ந்தன்று - நுண்ணிதாக மலர்ந்தது, ஒண்ணுதல் முகனே - தலைவியின் முகம்