குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 032
குறிஞ்சி - தலைவன் கூற்று
குறிஞ்சி - தலைவன் கூற்று
பாடல் பின்னணி:
தோழியினிடம் தன் குறைகூறி அவள் உடம்படாமையை அறிந்த தலைவன், “யான் தலைவியின் பிரிவை ஆற்றேன்; அவளை அடையும் பொருட்டு மடலேறினால் அவளுக்குப் பழி உண்டாகும்; வாளாவிருப்பின் வாழ்தலும் பழி; ஆதலின் இவை நேரா வண்ணம் நீ குறைநேர்வாயாக” என்று அவளுக்குக் கூறியது.
காலையும், பகலும், கை அறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும் என்றி,
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்,
மா என மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே, . . . . [05]
வாழ்தலும் பழியே, பிரிவுதலை வரினே.
ஊர் துஞ்சு யாமமும், விடியலும் என்றி,
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்,
மா என மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே, . . . . [05]
வாழ்தலும் பழியே, பிரிவுதலை வரினே.
- அள்ளூர் நன்முல்லையார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
காலையும் பகலுங் கையறு மாலையும்
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலொடு மறுகிற் றோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே . . . . [05]
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப்
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம்
மாவென மடலொடு மறுகிற் றோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே . . . . [05]
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே.
பொருளுரை:
காலைப்பொழுதும் உச்சிப் பொழுதும் பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலைப் பொழுதும் ஊரினர் துயில்கின்ற இடையிரவும் விடியற்காலமும் என்ற இச்சிறு பொழுதுகள் இடையே தோற்று மாயின் அத்தகையோருடைய காமம் உண்மை அன்று; பிரிவு வருமாயின் அப்போது குதிரையெனக் கொண்டு பனை மடலால் செய்த குதிரையின் உருவத்தை ஊர்ந்து தெருவில் வெளிப்பட்டு யாவரும் இன்னாளால் இவன் இச் செயல் செய்தானென்று தெளியும்படி தலைவி செய்த துயரைப் பலர் அறியச் செய்தலும் பழிக்குக் காரணமாகும்; அது செய்யாது உயிரோடு வாழ்ந்திருத்தலும் பழிக்குக் காரணமாகும்.
முடிபு:
பொழுது இடைதெரியின், காமம் பொய்; பிரிவு தலைவரின் தூற்றலும் பழியே; வாழ்தலும் பழியே.
கருத்து:
தலைவியைப் பிரியின் உயிர் வாழேன்.






