குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 068

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் முன்பனி பருவத்தும் வராமையால் பெரிதும் வருந்திய தலைவி தனது ஆற்றாமையைத் தோழியிடம் கூறியது.

பூழ்க் கால் அன்ன செங் கால் உழுந்தின்
ஊழ்ப்படு முது காய் உழையினம் கவரும்
அரும் பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே.
- அள்ளூர் நன்முல்லையார்.

பொருளுரை:

காடையின் கால்களைப் போன்ற சிவந்த நிறத்தையுடைய தாளையுடைய உழுந்துச் செடிகளின் முற்றியக் காய்களை மான் கூட்டங்கள் தின்னும் பொருட்டுக் கொள்ளும் தாங்குதற்கரிய பனி பெய்யும் இந்த முன்பனிக்காலத்தால் உண்டாகிய என்னுடைய காதல் நோய்க்கு என்னை மணந்த என் தலைவனின் மார்பு தான் மருந்து. வேறு மருந்து யாதும் இல்லை.

குறிப்பு:

அள்ளூர் பாண்டிய நாட்டின் ஊர் - பிண்ட நெல்லின் அள்ளூர் (அகநானூறு 46). இரா. இராகவையங்கார் உரை - மார்பை பனி என்றதால் பனி நோயாயிற்று. புலத்தின்கண் வித்திய உழுந்து பூத்தற்கு முன்னர் வருவமென்று தெளித்துப் போனவர் அது முதுகாய் விட்டு உழையினங் கவரும் போதும் வந்திலர் என்பது கருதிக் கூறினாள். இறைச்சி - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - மானினம் உழுந்தின் காயைக் கவரும் அச்சிரம் என்றதனானே, விலங்கும் தனக்கு வேண்டிய நுகர்ச்சியை இனத்தோடு பெற்று மகிழாநிற்கும் இக்காலத்து, யானே தனித்து எவ்வகை நுகர்ச்சியும் இன்றித் துன்பமுறலானேன்; என் செய்வேன்! என்பதாம். பூழ் - குறும்பூழ் என்பதன் குறை, அச்சிரம் - ஆகுபெயர், மார்பே, பிரிநிலை ஏகாரம்.

சொற்பொருள்:

பூழ்க்கால் அன்ன - காடையின் காலைப் போன்ற, செங்கால் உழுந்தின் - சிவந்தக் தாளையுடைய உழுந்தின், ஊழ்ப்படு முதுகாய் - முற்றியக் காய், உழையினங் கவரும் - மான் கூட்டம் உண்ண வரும், அரும்பனி - தாங்குதற்கரிய முன்பனிக் காலம், அச்சிரம் தீர்க்கும் - முன்பனிக்காலத்தால் உண்டாகும் துன்பத்தைப் போக்கும் (அச்சிரம் - ஆகுபெயர்), மருந்து பிறிதில்லை - மருந்து வேறு இல்லை, அவர் மணந்த மார்பே - என்னை மணந்த அவருடைய மார்பு