குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 151
பாலை - தலைவன் கூற்று
பாலை - தலைவன் கூற்று
பாடல் பின்னணி:
பொருள் தேடிவரும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிந்த தன் நெஞ்சை நோக்கி, “பாலைநிலம் செல்லுதற்கு அரிதென்று கருதாமல் தலைவியைப் பிரிந்து செல்லுதல் நம் இளமைக்கு முடிவாகும்” என்று கூறித் தலைவன் வருந்தியது.
வங்காக் கடந்த செங்காற் பேடை
எழால் உற வீழ்ந்தெனக், கணவன் காணாது,
குழலிசைக் குரல குறும்பல அகவும்
குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது,
மறுப்பு அரும் காதலி ஒழிய, . . . . [05]
இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே.
எழால் உற வீழ்ந்தெனக், கணவன் காணாது,
குழலிசைக் குரல குறும்பல அகவும்
குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது,
மறுப்பு அரும் காதலி ஒழிய, . . . . [05]
இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே.
- தூங்கலோரியார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
வங்காக் கடந்த செங்காற் பேடை
எழாஅலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
குழலிசைக் குரல் குறும்பல அகவும்
குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது
மறப்பருங் காதலி யொழிய . . . . [05]
இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே.
எழாஅலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
குழலிசைக் குரல் குறும்பல அகவும்
குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது
மறப்பருங் காதலி யொழிய . . . . [05]
இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே.
பொருளுரை:
நெஞ்சே! ஆண் வங்காப் பறவை நீங்கப் பெற்றமையால் தனித்த சிவந்த காலையுடைய பெண் பறவை புல்லூறென்னும் பறவை தம் மேல் நெருங்க இரையாகக் கொள்ளும் பொருட்டு வீழ்ந்ததாக தம்முடைய கணவனாகிய ஆண்பறவையைக் காணாமல் வேய்ங் குழலினது இசையைப் போன்ற குரல்களை யுடையனவாய் குறிய பல ஒலிகளால் அழைக்கும் குன்றைப் பொருந்திய சிறிய வழிகள் கடத்தற்கு அரியன வென்று எண்ணாமல் மறத்தற்கரிய நம் தலைவி இங்கே தங்க நான் செல்வேனென்று துணிவது இங்கே நம் இளமைப் பருவத்துக்கு முடிவாகும்.
முடிபு:
நெஞ்சே, சிறுநெறி அரிய என்னாது காதலியொழிய இறப்ப லென்பது இளமைக்கு முடிவு.
கருத்து:
இளமை பயனற்றுக் கழியுமாதலின், யான் தலைவியைப் பிரிந்து செல்லேன்.






