குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 150
குறிஞ்சி - தலைவி கூற்று
குறிஞ்சி - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைவனுக்கு இரவுக்குறி நேர்ந்த தோழி தலைவிக்கு அதனைத் தெரிவிப்ப, தலைவி, “தலைவர் மார்பு நினைத்தால் காமநோய் மிகுதற்குக் காரணமாக உள்ளது; புல்லினால் அந்நோய் நீங்குதற்குக் காரணமாக உள்ளது” என்று தோழிக்குக் கூறும் வாயிலாகத் தன் உடம்பாட்டைத் தெரிவித்தது.
வான்மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின், உண்ணோய் மல்கும்,
புல்லின் மாய்வது எவன் கொல் அன்னாய்? . . . . [05]
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம்
உள்ளின் உண்ணோய் மல்கும்
புல்லின் மாய்வ தெவன்கொல் அன்னாய் . . . . [05]
பொருளுரை:
தோழி! தொலைவில் பரண் மீது இருக்கும் மலைக்குறவன் கொளுத்திய நறுமணப் புகை உடைய கொள்ளி, வானத்தில் உள்ள விண்மீன்களைப் போல் இடந்தோறும் ஒளி வீசும் உயர்ந்த மலையுடைய நாடன் அவன். அவனை நினைத்தால் என்னுள் இருக்கும் காம நோய் அதிகமாகும். அவனைத் தழுவினால் அது அழியும். என்ன வியப்பு இது!
குறிப்பு:
கொல் - அசை நிலை. சேணோன் (1) - உ. வே. சாமிநாதையர் உரை - வேங்கை மரத்தின் மீது கட்டப்பட்ட பரணிலும் யானைகளாலும் எட்ட முடியாத குன்றின் மீது கட்டப்பட்ட பரணிலும் இருப்பவன் ஆதலின் இவன் சேணோன் எனப்பட்டான். அன்னாய் (5) - உ. வே. சாமிநாதையர் உரை (குறுந்தொகை 34 உரையில்) - தோழியைத் தலைவி அன்னாய் என்றல் மரபு.
சொற்பொருள்:
சேணோன் - தொலைவில் பரண் மீது இருப்பவன் (மலைக் குறவன், தினைப் புனத்தைக் காவல் காப்பவன்), மாட்டிய - கொளுத்திய, நறும் புகை - நறுமணம் உடைய புகை, ஞெகிழி - தீப்பந்தம், வான் மீனின் - வான் மீன் போன்று (மீனின்- இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப் பொருளில் வந்தது), வயின்வயின் இமைக்கும் - இங்கும் அங்கும் ஒளிக்கும், ஓங்குமலை - உயர்ந்த மலை, நாடன் - நாடன், சாந்து புலர் அகலம் - சந்தனத்தைப் பூசிய மார்பு, உள்ளின் - நினைத்தால், உள் நோய் - உள் இருக்கும் காம நோய், மல்கும் - அதிகமாகும், புல்லின் - (அவனை) தழுவினால், மாய்வது - அழியும் (அந்த நோய்), எவன் கொல் அன்னாய் - என்ன வியப்பு இது தோழி.