குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 082
குறிஞ்சி - தலைவி கூற்று
குறிஞ்சி - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் தான் வருவதாகக் கூறிச் சென்ற முன்பனிப் பருவம் வரவும் அவன் வாராமையினால் வருத்தமுற்ற தலைவியை நோக்கி, “நீ வருந்தற்க; அவர் தலையளி செய்து பிரிந்த அன்புடையவராதலின் விரைவில் வருவர்” என்ற தோழியை நோக்கி, “அவர் முன்பு அன்புடையராயினும் இப்பொழுது வந்திலராதலின் அவர் தன்மை மாறியது போலும்!” என்று தலைவி கூறியது.
வார் உறு வணர் கதுப்பு உளரி புறம் சேர்பு
அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார்
யாராகுவர் கொல் தோழி சாரல்
பெரு புனம் குறவன் சிறு தினை மறுகால்
கொழு கொடி அவரை பூக்கும் . . . . [05]
அரும் பனி அச்சிரம் வாராதோரே.
அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார்
யாராகுவர் கொல் தோழி சாரல்
பெரு புனம் குறவன் சிறு தினை மறுகால்
கொழு கொடி அவரை பூக்கும் . . . . [05]
அரும் பனி அச்சிரம் வாராதோரே.
- கடுவன் மள்ளனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்
பழாஅ லென்றுநம் மழுதகண் டுடைப்பார்
யாரா குவர் கொ றோழி சாரற்
பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்
கொழுங்கொடி யவரை பூக்கு . . . . [05]
மரும்பனி யச்சிரம் வாரா தோரே.
பழாஅ லென்றுநம் மழுதகண் டுடைப்பார்
யாரா குவர் கொ றோழி சாரற்
பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்
கொழுங்கொடி யவரை பூக்கு . . . . [05]
மரும்பனி யச்சிரம் வாரா தோரே.
பொருளுரை:
தோழி! மலைப்பக்கத்திலுள்ள பெரிய தினைப்புனத்திலுள்ள குறவனது சிறிய தினையரிந்த மறு காலிடத்தில் கொழுவிய அவரைக் கொடி மலர்கின்ற பொறுத்தற் கரிய பனியையுடைய அச்சிரக் காலத்திலும் வாராத தலைவர் நீட்சியை யுடைய வளைந்த கூந்தலை வகிர்ந்து முதுகைச் சார்ந்து அழுதலை யொழி யென்று கூறி நம் அழுத கண்ணீரை முன்பு துடைப்பார்; இப்பொழுது எத்தன்மையை உடையராவரோ?
முடிபு:
தோழி, வாராதோர், முன்பு துடைப்பார்; இப்பொழுது யாராகுவர்கொல்?
கருத்து:
தலைவர் முன்பு அன்புடையராயினும் இப்பொழுது அன்பின்றி என்னை மறந்தனர் போலும்!