குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 221

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்தது கண்டு, கவலை அடைந்த தன்னை, ஆற்றுப்படுத்தும் தன்னுடைய தோழியை நோக்கித் தலைவி வருத்தத்துடன் கூறுகின்றாள்.

அவரோ வாரார், முல்லையும் பூத்தன,
பறியுடைக் கையர் மறி இனத்து ஒழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய வெல்லாம், சிறுபசு முகையே . . . . [05]
- உறையூர் முதுகொற்றனார்.

பொருளுரை:

அவர் இன்னும் வரவில்லை. முல்லை மலர்கள் மலர்ந்து விட்டன. பனை ஓலையையைக் கையில் கொண்ட இடையன் தன் ஆட்டு குட்டிகளைப் பிற ஆடுகளோடு தங்க வைத்து விட்டு, பாலைக் கொண்டு வந்து கொடுத்துச் சோற்றைப் பெற்றுச் செல்கின்றான். அந்த இடையன் தன் தலையில் சிறிய பசுமையான முல்லை அரும்புகளைச் சூடி இருக்கின்றான்.

குறிப்பு:

பருவங் கண்டு தலைவி கூறியது. அவரோ - ஓகாரம் அசை நிலை, இரங்கற் குறிப்புமாம், முகையே - ஏகாரம் பிரிநிலை. முல்லையும் - உம்மை, சிறப்பு, முல்லை பூத்தல் கார் காலத்திற்கு அடையாளம், பறி (2) - உ. வே. சாமிநாதையர் உரை - இடையர்கள் மழைக்காகத் தலையில் கவிழ்த்துக் கொள்ளும் ஒரு வகைக் கருவி. இது பனை ஓலையால் செய்யப்பட்டது. இடை மகன் சென்னிச் சூடிய எல்லாம் சிறு பசு முகையே (4-5) - இரா. இராகவையங்கார் உரை - தான் சூடலாகாமை குறித்ததாம். தமிழண்ணல் உரை - பாலைத் தந்து உணவைப் பெறுவது பண்டமாற்று. உ. வே. சாமிநாதையர் உரை - மேய்ப்பவர்கள் மேய்ச்சல் நிலத்தில் தங்க இடையன் இடையன் பாலை வீட்டிற்குக் கொணர்ந்து கொடுத்து அவர்களுக்குப் பால் சோற்றைக் கொண்டு சென்றான். பாலை விற்கும் பொருட்டு வந்த இடையன் ஊரில் அதனை விற்று விட்டு அதற்கு விலையாக உணவிற்குரிய தானியத்தைப் பெற்றுச் சென்றான் எனலும் உண்டு. அகநானூறு 123 - இறவொடு வந்து கோதையொடு பெயரும், அகநானூறு 149 - பொன்னொடு வந்து கறியொடு பெயரும், குறுந்தொகை 221 - பாலொடு வந்து கூழொடு பெயரும். மறி - மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின் பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே (தொல்காப்பியம், மரபியல் 1).

சொற்பொருள்:

அவரோ வாரார் - அவர் இன்னும் வரவில்லை, முல்லையும் பூத்தன - முல்லை மலர்களும் மலர்ந்து விட்டன, பறியுடைக் கையர் - பனை ஓலையை உடையவர், மறி இனத்து ஒழிய - குட்டிகளோடு உள்ள ஆட்டின் திரளோடு சென்று தங்க, பாலொடு வந்து கூழொடு பெயரும் - பாலைக் கொண்டு வந்து கொடுத்து சோற்றைப் பெற்றுச் செல்லும், ஆடுடை இடைமகன் - ஆடுகளையுடைய இடையன், சென்னிச் சூடிய - தலையில் சூடியது, எல்லாம் - எல்லாம், சிறுபசு முகையே - சிறிய பசுமையான முல்லை அரும்புகளே