குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 205

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

வரைவிற்கு பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்ததால் தலைவி ஆற்றாள் என வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது.

மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க
விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப்
பொலம்படைப் பொலிந்த வெண்டேர் ஏறிக்
கலங்குகடல் துவலை ஆழி நனைப்ப
இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன் . . . . [05]

யாங்கறிந் தன்றுகொல் தோழியென்
தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே.
- உலோச்சனார்.

பொருளுரை:

மின்னலையும் இடியையும் மழையையும் உண்டாக்கும் முகில்கள் வானில் மிதக்கின்றன. கடல் நீர் அலைகளால் கலங்குகின்றது. என்னுடைய தலைவன் தங்க அணிகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளைத் தேரை கடற்கரையில் செலுத்திக்கொண்டு போகின்றான். அவனுடைய தேர்ச் சக்கரம் அலைகளின் நீர்த் துளிகளால் நனைந்து மேலும் கீழும் ஆடிச் செல்லும். அப்பொழுது, அன்ன பறவை தன் சிறகுகளை அசைத்துப் பறப்பது போன்று தோன்றும் அத் தேர். காற்று மணலை கரையில் கொண்டு வந்து சேர்க்கும் நெய்தல் நிலத்தின் தலைவன் போவதை என் தேன்மணம் கமழும் நெற்றி எவ்வாறு அறிந்தது தோழி? அதில் பசலைப் படர்ந்தது.

குறிப்பு:

சென்றனனே - ஏகாரம் அசை நிலை, பசப்பே - ஏகாரம் அசை நிலை. கருவிய (1) - இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய. படை (3) - உ. வே. சாமிநாதையர் உரை - தட்டு, பக்கத்தில் அமைத்த பலகைகளுமாம்.

சொற்பொருள்:

மின்னுச்செய் - மின்னலுடன், கருவிய - இடியும் சேர்ந்து பெய்யும், பெயன் - மழை, மழை - மேகம், தூங்க - தொங்க, விசும்பு - ஆகாயம், ஆடு - பறக்கும், அன்னம் - அன்னம், பறை நிவந்தாங்குப் - சிறகுகளை மேலும் கீழும் ஆட்டி பறந்ததுப் போல், பொலம்படை - பொன் அலங்காரம், பொலிந்த வெண் தேர் - அழகிய வெள்ளை தேர், ஏறி - ஏறி, கலங்கு கடல் - கலங்கும் கடல் நீர், துவலை - நீர்த் துவலை, ஆழி - தேர்ச் சக்கரம், நனைப்ப - நனைத்து, இனிச் சென்றனனே - அவன் போய் சென்றான், இடுமணல் - (காற்று கொண்டு வந்து) இடும் மணல், சேர்ப்பன் - நெய்தல் நிலத்தின் தலைவன், யாங்கு - அதனை, அறிந்தன்று கொல் தோழி - எவ்வாறு அறிந்தது தோழி? என் - என், தேங்கமழ் - தேன் மணம் கமழும், திருநுதல் - அழகிய நெற்றி, ஊர்தரும் பசப்பே - படர்ந்தன பசலையை