குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 105
குறிஞ்சி - தலைவி கூற்று
குறிஞ்சி - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் நெடுங்காலம் வரையாமல் பிரிந்திருந்தானாக, “தலைவன் கேண்மை வரைவினால் உண்மையாகாமல் என் நினைவளவில் நின்று துன்புறுத்துகின்றது” என்று கூறித் தலைவி வருந்தியது.
புனவன் துடவை பொன் போல் சிறு தினை
கடி உண் கடவுட்கு இட்ட செழு குரல்
அறியாது உண்ட மஞ்ஞை ஆடு மகள்
வெறி உறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை . . . . [05]
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே.
கடி உண் கடவுட்கு இட்ட செழு குரல்
அறியாது உண்ட மஞ்ஞை ஆடு மகள்
வெறி உறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை . . . . [05]
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே.
- நக்கீரர்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினைக்
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
அறியா துண்ட மஞ்ஞை யாடுமகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர்மலை நாடன் கேண்மை . . . . [05]
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே
கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்
அறியா துண்ட மஞ்ஞை யாடுமகள்
வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்
சூர்மலை நாடன் கேண்மை . . . . [05]
நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே
பொருளுரை:
தோழி! குறவனுக்குரிய தோட்டத்தில் விளைந்த பொன்னைப் போன்ற சிறு தினையில் புதியதை உண்ணும் தெய்வத்துக்குப் பலியாக இட்ட வளவிய கதிரை தெரியாமல் உண்ட மயில் தேவராட்டி வெறியாடுகின்ற அழகைப் போல வெம்மையுற்று நடுங்குதற்கு இடமாகிய தெய்வங்கள் உறையும் மலைநாட்டையுடைய தலைவனது நட்பு நீர் மிக்க கண்களோடு நாம் நினைந்து துன்புறுதற்குக் காரணமாகியது.
முடிபு:
மலைநாடன் கேண்மை நினைப்பாகின்றது.
கருத்து:
தலைவன் வரையாமையின் அவனை நினைந்து துன்புறு கின்றேன்.