குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 045

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தோழி வாயில் நேர்ந்தது. தலைவன் விடுத்த தூதுவர் தலைவியின் உடன்பாட்டை வேண்டியபொழுது, தலைவி உடன்பட்டாள் என அறிந்த தோழி, இவ்வாறுக் கூறி, குறிப்பினால், தலைவியின் உடன்பாட்டைத் தெரிவித்தது.

காலை எழுந்து கடுந்தேர் பண்ணி
வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற
மல்லல் ஊரன் எல்லினன் பெரிதென,
மறுவரும் சிறுவன் தாயே,
தெறுவது அம்ம, இத் திணைப் பிறத்தல்லே . . . . [05]
- ஆலங்குடி வங்கனார்.

பொருளுரை:

காலையில் எழுந்து, விரைந்து செல்லும் தேரை ஒப்பனை செய்து, தூய அணிகலன்கள் அணிந்த பரத்தையரைத் தழுவப் போகும் வளப்பமுடைய ஊரையுடைய தலைவன் மிகுந்த விளக்கத்தை உடையவன் என்று எண்ணி, மகனைப் பெற்ற தாய்மைத் தன்மையுடைய தலைவி, அவனுடைய பரத்தமைக்காக வருந்தினாலும் அவனை ஏற்றுக் கொள்வாள். இது அவளுடைய உயர்குடி பிறப்பினால் உள்ள நடத்தை. உயர்குடியில் பிறத்தல் அவளுக்குத் துன்பம் தருவதேயாம்.

குறிப்பு:

மறுவரும் (4) - உ. வே. சாமிநாதையர் உரை - அவனை ஏற்றுக் கொள்வாளாயினும் மனம் சுழலுவாள், பொ. வே. சோமசுந்தரனார் உரை - மனம் சுழலுவாள் ஆயினும் அவனை ஏற்றுக் கொள்வாளாயினள். தெறுவது அம்ம (5) - உ. வே. சாமிநாதையர் உரை - ‘தெறுவது அம்ம’ என்று தோழி கூறியமையால் அவனை ஏற்றுக் கோடல் தகாதென்பது அவள் கருத்தாதல் விளங்கும். பரிபாடல் 20 - சேக்கை இனியார் பால் செல்வான் மனையாளால் காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ? கூடா; தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார் இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார். கலித்தொகை 11 - மாய மகிழ்நன் பரத்தைமை நோவென் தோழி, கடன் நமக்கு எனவே. தழீஇய - சொல்லிசை அளபெடை, அம்ம - அசை நிலை, தாயே - ஏகாரம் அசைநிலை, பிறத்தல்லே - லகர ஒற்று செய்யுளோசை நோக்கி விரிக்கும்வழி விரிந்தது, ஏகாரம் அசைநிலை. மல்லல் - மல்லல் வளனே (தொல்காப்பியம், உரியியல் 7).

சொற்பொருள்:

காலை எழுந்து - காலையில் எழுந்து, கடுந்தேர் பண்ணி - விரைந்து செல்லும் தேரை ஒப்பனை செய்து, வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற - தூய அணிகலன்கள் அணிந்த பரத்தையரைத் தழுவப் போன, மல்லல் ஊரன் எல்லினன் பெரிதென - வளப்பமுடைய ஊரையுடைய தலைவன் மிகுந்த விளக்கத்துடன் காணப்பட்டான் என, மறுவரும் சிறுவன் தாயே - மகனைப் பெற்ற தாய்மைத் தன்மையுடைய தலைவி வருந்துவாள், தெறுவது - துன்பம் தருவது, அம்ம - அசைநிலை, இத் திணைப் பிறத்தல்லே - இக்குடியில் பிறந்தது