குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 078
குறிஞ்சி - பாங்கன் கூற்று
குறிஞ்சி - பாங்கன் கூற்று
பாடல் பின்னணி:
தலைவனது வேறுபாட்டுக்குக் காரணம் அவன் ஒருத்திபாற் கொண்ட காமமேயென்பதனை உணர்ந்து, “காமம் தகுதியில்லாரிடத்தும் செல்வதாதலின் அது மேற்கொள்ளத் தக்கதன்று” என்று பாங்கன் இடித்துரைத்தது.
பெருவரை மிசையது நெடு வெள் அருவி
முது வாய்க் கோடியர் முழவின் ததும்பி,
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப!
நோதக்கன்றே - காமம் யாவதும்
நன்று என உணரார் மாட்டும் . . . . [05]
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே.
முது வாய்க் கோடியர் முழவின் ததும்பி,
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப!
நோதக்கன்றே - காமம் யாவதும்
நன்று என உணரார் மாட்டும் . . . . [05]
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே.
- நக்கீரனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
பெருவரை மிசையது நெடுவெள் ளருவி
முதுவாய்க் கோடியர் முழவிற் றதும்பிச்
சிலம்பி னிழிதரு மிலங்குமலை வெற்ப
நோதக் கன்றே காமம் யாவதும்
நன்றென வுணரார் மாட்டும் . . . . [05]
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே.
முதுவாய்க் கோடியர் முழவிற் றதும்பிச்
சிலம்பி னிழிதரு மிலங்குமலை வெற்ப
நோதக் கன்றே காமம் யாவதும்
நன்றென வுணரார் மாட்டும் . . . . [05]
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே.
பொருளுரை:
பெரிய மலையின் உச்சியிலுள்ளதாகிய நெடிய வெள்ளிய அருவியானது அறிவு வாய்த்தலையுடைய கூத்தரது முழவைப்போல ஒலித்து பக்கமலையின்கண் வீழும் விளங்குகின்ற மலைகயையுடைய தலைவ காமமானது சிறிதும் இது நன்மையென உணரும் அறிவில்லா தாரிடத்தும் சென்று தங்குகின்ற பெரிய அறிவின்மையையுடையது; ஆதலின் அது வெறுக்கத்தக்கது.
முடிபு:
வெற்ப, காமம் பெரும்பேதைமைத்து; நோதக்கன்று.
கருத்து:
நீ ஒருத்திபாற் கொண்ட காமத்தை ஒழிவாயாக.