குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 135

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரியவெண்ணியிருப்பதை யறிந்து வேறுபட்ட தலைவியை நோக்கி, “ஆடவர் மகளிர்க்கு உயிரென்று கூறியவராகிய தலைவர் இப்பொழுது நின்னைப் பிரிந்து செல்லார்’ என்று தோழி கூறி ஆற்றுவித்தது.

வினையே ஆடவர்க்கு உயிரே, வாணுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிரென,
நமக்கு உரைத்தோரும் தாமே,
அழாஅல் தோழி, அழுங்குவர் செலவே.
- பாலைபாடிய பெருங் கடுங்கோ.

பொருளுரை:

தொழில் தான் ஆண்களுக்கு உயிர் ஆகும். இல்லத்தில் இருக்கும், ஒளியுடைய நெற்றியையுடைய மகளிர்க்குக் கணவர்களே உயிர் ஆவார்கள் என்று நமக்குக் கூறியவரும் அவரே. அழாதே தோழி. செல்லுவதைத் தவிர்ப்பார் அவர்.

குறிப்பு:

வினையே - ஏகாரம் பிரிநிலை, தாமே - ஏகாரம் தேற்றம், அழாஅல் - இசைநிறை அளபெடை, செலவே: ஏகாரம் அசை நிலை, உயிரே: ஏகாரம் அசை நிலை. உ. வே. சாமிநாதையர் உரை - இது கற்புக் காலத்தது. வாள் - வாள் ஒளி ஆகும் (தொல்காப்பியம் உரியியல் 71).

சொற்பொருள்:

வினையே - தொழில் தான், ஆடவர்க்கு - ஆண்களுக்கு, உயிரே - உயிர் ஆகும், வாள் நுதல் - ஒளியுடைய நெற்றி, மனை உறை மகளிர்க்கு - இல்லத்தில் இருக்கும் மகளிர்க்கு, ஆடவர் உயிரென - கணவர்களே உயிர் ஆவார்கள் என்று, நமக்கு உரைத்தோரும் - நமக்குக் கூறியவரும், தாமே - அவரே, அழாஅல் தோழி - அழாதே தோழி, அழுங்குவர் செலவே - செல்லுவதைத் தவிர்ப்பார்