குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 375
குறிஞ்சி - தோழி கூற்று
குறிஞ்சி - தோழி கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் சிறைப்புறத்தே நிற்ப, “காவலருடைய காவல் மிக்கது” என்று தலைவிக்குக் கூறும் வாயிலாகத் தோழி, வரைதல் வேண்டுமென்பதை அவனுக்கு உணர்த்தியது.
அம்ம வாழி, தோழி! - இன்று அவர்
வாரார் ஆயினோ நன்றே - சாரல்
சிறு தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து
இரவு அறிவாரின், தொண்டகச் சிறு பறை
பானாள் யாமத்தும் கறங்கும் . . . . [05]
யாமம் காவலர் அவியாமாறே.
வாரார் ஆயினோ நன்றே - சாரல்
சிறு தினை விளைந்த வியன்கண் இரும் புனத்து
இரவு அறிவாரின், தொண்டகச் சிறு பறை
பானாள் யாமத்தும் கறங்கும் . . . . [05]
யாமம் காவலர் அவியாமாறே.
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
அம்ம வாழி தோழி இன்றவர்
வாரா ராயினோ நன்றே சாரற்
சிறுதினை விளைந்த வியன்கண் இரும்புனத்
திரவரி வாரின் தொண்டகச் சிறுபறை
பானாள் யாமத்துங் கறங்கும் . . . . [05]
யாமங் காவலர் அவியா மாறே.
வாரா ராயினோ நன்றே சாரற்
சிறுதினை விளைந்த வியன்கண் இரும்புனத்
திரவரி வாரின் தொண்டகச் சிறுபறை
பானாள் யாமத்துங் கறங்கும் . . . . [05]
யாமங் காவலர் அவியா மாறே.
பொருளுரை:
தோழி! ஒன்று கூறுவன் கேட்பாயாக மலைப்பக்கத்தில் சிறிய தினைவிளைந்த அகன்ற இடத்தையுடைய பெரிய கொல்லையில் இராக்காலத்தே தினைக்கதிரை அரிபவர்களைப்போல தொண்டகமாகிய சிறிய பறை பாதியிரவிலும் இராக் காவலாளிகள் தூங்காமையினால் ஒலிக்கும் இன்று! அத்தலைவர் வாராராயின்! நலமாகும்.
முடிபு:
காவலர் அவியாமாறு கறங்கும்; இன்று அவர் வாராராயின் நன்று.
கருத்து:
தலைவர் இரவில் வருதல் நன்றன்று.