குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 291
குறிஞ்சி - தலைவன் கூற்று
குறிஞ்சி - தலைவன் கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் பாங்கனுக்குத் தலைவி இவ்விடத்தினள், இவ்வியல்பினள் என்று கூறியது.
சுடு புன மருங்கில் கலித்த ஏனற்
படுகிளி கடியும் கொடிச்சி கைக்குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே;
கிளி, "அவள் விளி" என, விழல் ஓவாவே;
அது புலந்து அழுத கண்ணே, சாரல் . . . . [05]
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ,
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே.
படுகிளி கடியும் கொடிச்சி கைக்குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே;
கிளி, "அவள் விளி" என, விழல் ஓவாவே;
அது புலந்து அழுத கண்ணே, சாரல் . . . . [05]
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ,
தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே.
- கபிலர்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
சுடுபுன மருங்கிற் கலித்த வேனற்
படுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே
இசையின் இசையா இன்பா ணித்தே
கிளியவள் விளியென எழலொல் லாவே
அதுபுலந் தழுத கண்ணே சாரற் . . . . [05]
குண்டுநீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை
வண்டுபயில் பல்லிதழ் கலைஇத்
தண்துளிக் கேற்ற மலர்போன் றனவே.
படுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே
இசையின் இசையா இன்பா ணித்தே
கிளியவள் விளியென எழலொல் லாவே
அதுபுலந் தழுத கண்ணே சாரற் . . . . [05]
குண்டுநீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை
வண்டுபயில் பல்லிதழ் கலைஇத்
தண்துளிக் கேற்ற மலர்போன் றனவே.
பொருளுரை:
தோழ! மரங்களைவெட்டிச் சுட்ட கொல்லையில் தழைத்ததினையின் இடத்தே வீழ்கின்ற கிளிகளை ஓட்டுகின்ற தலைவியினது கையின்கண் உள்ள குளிர் என்னும் கருவியானது இசையோடு பொருந்தி இனியதாளத்தை உடையது; அக்குளிரின் ஓசையை அத் தலைவியின் பாட்டு என்று கருதி கிளிகள் தாம் படிந்த தினையினின்றும் எழுதலைப் பொருந்தா; அதனைப்புலந்து அழுத அவளுடைய கண்கள் மலைப்பக்கத்திலே உள்ள ஆழமாகிய நீரை உடைய பசிய சுனையின் இடத்தே பூத்த குவளையினது வண்டுகள் பழகுகின்ற பல இதழ்கள் கலைந்து தண்ணிய மழைத் துளியை ஏற்றுக் கொண்ட மலர்களைப் போன்றன.
முடிபு:
கொடிச்சியின் கைக்குளிர் இன்பாணித்து; கிளி எழலொல்லா; கண் மலர் போன்றன.
கருத்து:
தலைவி தினைப்புனத்தில் காவல் செய்துகொண்டு இருக்கின்றாள்.