குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 102
நெய்தல் - தலைவி கூற்று
நெய்தல் - தலைவி கூற்று
பாடல் பின்னணி:
தலைவன் பிரிந்து நெடுங்காலம் நீட்டித்தானாக அதனை உணர்ந்து அவனது பிரிவைத் தலைவி ஆற்றாளெனத் தோழி கவன்றதையறிந்து அத்தலைவி ‘அவரை நினைந்து நினைந்து காமநோய் மிக்கு வருந்துகின்றேன்; அவர் தம் சொற்படி இன்னும் வந்திலர்’ என்று கூறியது.
உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி
வான் தோய்வு அற்றே காமம்
சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே.
இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி
வான் தோய்வு அற்றே காமம்
சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே.
- அவ்வையார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா
திருப்பினெம் மளவைத் தன்றே வருத்தி
வான்றோய் வற்றே காமம்
சான்றோ ரல்லரியா மரீஇ யோரே.
திருப்பினெம் மளவைத் தன்றே வருத்தி
வான்றோய் வற்றே காமம்
சான்றோ ரல்லரியா மரீஇ யோரே.
பொருளுரை:
தலைவரை நினைந்தால் எம் உள்ளம் வேவாநிற்கும்; நினையாமல் இருப்பேமாயின் அங்ஙனம் இருத்தல் எமது ஆற்றலளவிற்கு உட் பட்டதன்று; காமநோயோ எம்மை வருந்தச் செய்து வானத்தைத் தோய்வது போன்ற பெருக்கத்தையுடையது; எம்மால் மருவப் பட்ட தலைவர் சால்புடை யாரல்லர்.
முடிபு:
உள்ளின் உள்ளம் வேம்; உள்ளாதிருப்பின் எம் அளவைத்தன்று; காமம் வான்தோய்வற்று; மரீஇயோர் சான்றோரல்லர்.
கருத்து:
தலைவர் தம் சொற்படி மீண்டு வாராமையின் ஆற்றேனா யினேன்.