குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 228

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனுடன் இல் வாழ்க்கை நடத்திய தலைவியை நோக்கி, “நீ இதுகாறும் நன்றாக ஆற்றி இருந்தாய்!” என்று தோழி கூறிய பொழுது, “தலைவர் என் நெஞ்சிற்கு அணியராய் இருந்ததனாலும் அவர் நாட்டுத்திரை நம்மூர்க்கு வந்து பெயர்ந்ததனாலும் ஆற்றி இருந்தேன்” என்று தலைவி கூறியது.

வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை,
குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,
திரை வந்து பெயரும் என்ப - நத் துறந்து
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும் . . . . [05]

நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே.
- செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்.

பொருளுரை:

தோழி! நம்மைப் பிரிந்துசென்று மிக்க சேய்மையில் உள்ள நாட்டில் இருப்பவராயினும் நெஞ்சிற்கு அணிமை இடத்துள்ளாரது தண்ணிய கடலை உடைய நாட்டினிடத்து விழுது தாழ்ந்ததாழையினது முதிர்ந்த கொழுவிய அரும்பு நாரைகள்கோதுகின்ற சிறகைப் போல விரிந்துமடல்கள் மலர்கின்ற கடற்கரைச் சோலையில் பொருந்திய சிற்றூரின் முன்னிடத்தில் அலைகள் வந்து மீண்டு செல்லும்.

முடிபு:

சிறுகுடி முன்றிலில் திரை வந்து அணியரது தண்கடனாட்டுப் பெயரும்.

கருத்து:

தலைவன் என் நெஞ்சில் இருந்தமையின் ஆற்றி இருந்தேன்.