குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 343
பாலை - தோழி கூற்று
பாலை - தோழி கூற்று
பாடல் பின்னணி:
தோழி தலைவியிடம், “நீ தலைவனுடன் செல்வதை விரும்பி மேற்கொள்வாயாக” என்றது.
நினையாய் வாழி - தோழி! - நனை கவுள்
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை
வெண்கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக்
கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை . . . . [05]
வாடு பூஞ் சினையின், கிடக்கும்
உயர்வரை நாடனொடு பெயருமாறே.
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்தென
மிகு வலி இரு புலிப் பகுவாய் ஏற்றை
வெண்கோடு செம் மறுக் கொளீஇய, விடர் முகைக்
கோடை ஒற்றிய கருங்கால் வேங்கை . . . . [05]
வாடு பூஞ் சினையின், கிடக்கும்
உயர்வரை நாடனொடு பெயருமாறே.
- ஈழத்துப் பூதன்றேவனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
நினையாய் வாழி தோழி நனைகவுள்
அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென
மிகுவலி இரும்புலிப் பகுவா யேற்றை
வெண்கொடு செம்மறுக் கொளீஇ விடர்முகைக்
கோடை யொற்றிய கருங்கால் வேங்கை . . . . [05]
வாடுபூஞ் சினையிற் கிடக்கும்
உயர்வரை நாடனொடு பெயரும் ஆறே.
அண்ணல் யானை அணிமுகம் பாய்ந்தென
மிகுவலி இரும்புலிப் பகுவா யேற்றை
வெண்கொடு செம்மறுக் கொளீஇ விடர்முகைக்
கோடை யொற்றிய கருங்கால் வேங்கை . . . . [05]
வாடுபூஞ் சினையிற் கிடக்கும்
உயர்வரை நாடனொடு பெயரும் ஆறே.
பொருளுரை:
நீ நீடு வாழ்வாயாக தோழி! மதத்தால் கன்னத்தில் நீர் வடிந்த, தலைமையுடைய யானையின் அழகிய முகத்தில் பாய்ந்ததால், மிகுந்த வலிமையையுடைய பிளந்த வாயையுடைய ஆண் புலி ஒன்று, அந்த யானையின் வெள்ளைத் தந்தத்தை தன் குருதியால் சிவப்பாகச் செய்து, மலை பிளவில் உள்ள கோடைக் காற்று வீழ்த்திய கரிய அடியை உடைய வேங்கை மரத்தின் வாடிய மலர்களையுடைய கிளையைப் போல் இறந்து கிடக்கும், உயர்ந்த மலையுடைய நாட்டையுடைய தலைவனுடன் உடன்போக்கில் செல்லுவதற்கு நீ எண்ணுவாயாக!
முடிபு:
தோழி, நாடனொடு பெயருமாறு நினையாய்; வாழி!
கருத்து:
நீ தலைவனுடன் செல்லுதலே நன்று.






