குறுந்தொகை
பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்
ஐங்குறுநூறு
பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.
கலித்தொகை
பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.
அகநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.
பதிற்றுப்பத்து
பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.
புறநானூறு
பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
பரிபாடல்
பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.
குறுந்தொகை: 084
பாலை - செவிலி கூற்று
பாலை - செவிலி கூற்று
பாடல் பின்னணி:
தலைவி தமரைப் பிரிந்து தலைவனுடன் சென்றாளாக, அதனை யறிந்த செவிலி, “யான் நேற்று வழக்கம்போல் தழுவவும் அதனை என் மகள் வெறுத்தாள்; அதன் காரணத்தை அப்பொழுதே அறிந்திலேன்; இப்பொழுது அறிந்தேன்” என்று கூறி இரங்கியது.
பெயர்த்தனென்முயங்கயான்வியர்த்தனன் என்றனள்
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே . . . . [05]
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே . . . . [05]
- மோசிகீரனார்.
ஓசை ஒழுங்குடன் மூலப்பாடல்
பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனெ னென்றன
ளினியறிந் தேனது துனியா குதலே
கழறொடி யாஅய் மழைறவழ் பொதியில்
வேங்கையுங் காந்தளு நாறி
யாம்பன் மலரினுந் தான்றண் ணியளே . . . . [05]
ளினியறிந் தேனது துனியா குதலே
கழறொடி யாஅய் மழைறவழ் பொதியில்
வேங்கையுங் காந்தளு நாறி
யாம்பன் மலரினுந் தான்றண் ணியளே . . . . [05]
பொருளுரை:
உழல இட்ட தோள் வளையையுடைய ஆயென்னும் வள்ளலது மேகங்கள் தவழும் பொதியின் மலையில் உண்டான வேங்கை மலரினது மணத்தையும் காந்தள் மலரினது மணத்தையும் வீசி ஆம்பல் மலரைக் காட்டிலும் குளிர்ச்சியையுடையளாகிய என்மகள் யான் ஒருமுறை தழுவிய தோடமையாமல் மீட்டும் தழுவும் காலத்து நான் வியர்வையையடைந்தேன் என்று கூறினாள்; அங்ஙனம் யான் தழுவியது அவளுக்கு வெறுப்புண்டாக்குதற்குக் காரணமாதலை அவள் கூறிய அக்காலத்தே அறிந்திலேனாயினும் இப்பொழுது அறிந்தேன்.
முடிபு:
தண்ணியள், யான் முயங்க வியர்த்தனென் என்றனள்; அது துனியாகுதலை இனி அறிந்தேன்.
கருத்து:
தலைவி எம்பால் வெறுப்புற்று ஒரு தலைவன்பால் விருப்புற்றுச் சென்றனள்; இதனை முன்னரே அறிந்திலன்.






