புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 393

பழங்கண் வாழ்க்கை!


பழங்கண் வாழ்க்கை!

பாடியவர் :

  நல்லிறையனார்.

பாடப்பட்டோன் :

  சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.

திணை :

  பாடாண்.

துறை :

  கடைநிலை.

குறிப்பு :

  இடையிடையே சிதைவுற்ற செய்யுள் இது.

பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்
குறுநெடுந் துணையொடும் கூமை வீதலிற்,
குடிமுறை பாடி, ஒய்யென வருந்தி,
அடல்நசை மறந்தஎம் குழிசி மலர்க்கும்
கடனறி யாளர் பிறநாட்டு இன்மையின் . . . . [05]

வள்ளன் மையின்எம் வரைவோர் யார்? என;
உள்ளிய உள்ளமொடு உலைநசை துணையா,
உலகம் எல்லாம் ஒருபாற் பட்டென,
மலர்தார் அண்ணல்நின் நல்லிசை உள்ளி,
ஈர்ங்கை மறந்தஎன் இரும்பேர் ஒக்கல் . . . . [10]

கூர்ந்தஎவ் வம்வீடக், கொழுநிணம் கிழிப்பக்,
கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த
மூடைப் பண்டம் மிடைநிறைந் தன்ன,
வெண்நிண மூரி அருள, நாளுற
ஈன்ற அரவின் நாவுருக் கடுக்கும்என் . . . . [15]

தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப்,
போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன,
அகன்றுமடி கலிங்கம் உடீஇச், செல்வமும்
கேடின்று நல்குமதி, பெரும! மாசில்
மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி, . . . . [20]

ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடிக்,
கோடை யாயினும் கோடி .. .. .. .. ..
காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந!
வாய்வாள் வளவன் வாழ்க! எனப்
பீடுகெழு நோன்தாள் பாடுகம் பலவே . . . . [25]

பொருளுரை:

ஊர் மக்களோடு சேர்ந்து பழகமுடியாத நிலையில் புலவர் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார். சிறியனவும் பெரியனவுமான கழிகளால் கட்டப்பட்டிருந்த அவரது வீட்டுக்கூரை [கூமை] இடிந்து விழுந்துவிட்டது. தன் வீட்டுப் பானையில் இட்டுச் சமைக்க அரிசி கிடைக்குமா என்று வீடு வீடாகச் சென்று கடன் கேட்டார். தருவார் யாரும் இல்லை. எனவே கொடை வழங்கும் வள்ளல் யார் எனத் தேடிக்கொண்டு அலைந்தார். அப்போது அவருக்குத் துணையாக இருந்தது நப்பாசை ஒன்றுதான். அரசே! மலர்தார் மார்ப! உன் புகழைக் கேள்விப்பபட்டு உணவு உண்ட ஈரக் கையே மறந்துபோன என் சுற்றத்தாரோடு வந்திருக்கிறேன். நீ எனக்குப் பரிசில் நல்கவேண்டும். என் வறுமைத் துன்பம் நீங்கவேண்டும். கொழுத்த கறியைக் கிழித்து உண்ணவேண்டும். வீடு நிறைய பருத்தி மூட்டைகளை அடுக்கி வைத்திருப்பது போல் கொழுப்பு மூடிக்கிடக்கும் கறியை உண்ணவேண்டும். பாம்பு நாக்குப் பிளவுபட்டிருப்பது போல் கிழிந்திருக்கும் என் ஆடையை நீக்கிவிட்டுப் பகன்றைப் பூப் போன்ற வெண்ணிறப் புத்தாடை நல்கவேண்டும். அத்துடன் கெடுதல் இல்லாத செல்வமும் நல்கவேண்டும். நிலாவைப் போல உருவம் கொண்ட கிணைப்பறையை முழக்கிக்கொண்டு ஆடுமகள் ஆடுவாள். அவள் இடை போல, கோடைக்காலத்தில் நிலம் வறண்டுபோகும். அப்படிப்பட்ட கோடைக்காலத்திலும் காவிரி உன் நாட்டைக் காப்பாற்றும். அப்படிப்பட்ட காவிரிநாட்டுக்கு நீ தலைவன். உன் வாள்வீச்சுத் திறனால் ‘வாய்வாள் வளவன்’ என்று போற்றப்படுபவன். நீ நீடூழி வாழ்க. வாழ்க என்று நான் பாடுவேன். நீ வழங்குக - இவ்வாறு புலவர் வேண்டுகிறார்.