புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 057

காவன்மரமும் கட்டுத்தறியும்!


காவன்மரமும் கட்டுத்தறியும்!

பாடியவர் :

  காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.

பாடப்பட்டோன் :

  பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.

திணை :

  வஞ்சி.

துறை :

  துணை வஞ்சி.

வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையோன்; என்னெனின்,
நீயே, பிறர்நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு . . . . [05]

இறங்கு கதிர் கழனிநின் இளையரும் கவர்க:
நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க;
மின்னு நிமிர்ந் தன்ன நின்ஒளிறு இலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
கடிமரம் தடிதல் ஓம்பு! நின் . . . . [10]

நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே

பொருளுரை:

வல்லவரோ, அல்லாதவரோ யாராய் இருந்தாலும் புகழ்ந்தவருக்கெல்லாம் மாயவன் வேண்டியனவற்றையெல்லாம் வழங்குவான். அவனைப் போல வழங்கும் மாறனே! உனக்கு ஒன்று கூறுவேன், நீ பிறரது நாட்டைக் கைப்பற்றும் காலத்தில் அந்நாட்டு விளைச்சல் நிலங்களை உன் போர்மறவர்கள் கைப்பற்றினாலும் கைப்பற்றட்டும். ஊரைத் தீயிட்டுக் கொளுத்தினாலும் கொளுத்தட்டும். வேல்மறவர்களைக் குத்திக் கொன்றாலும் கொல்லட்டும். எது செய்தாலும் பகைவர் நாட்டுக் காவல் மரங்களை வெட்டுதலை மட்டும் கைவிட்டுவிடுக. அவை உன் யானைகளைக் கட்டிவைப்பதற்கு உதவும். (எல்லாவற்றையும் கைவிடுக என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது)