புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

புறநானூறு: 059

பாவலரும் பகைவரும்!


பாவலரும் பகைவரும்!

பாடியவர் :

  மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

பாடப்பட்டோன் :

  பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்.

திணை :

  பாடாண்.

துறை :

  பூவைநிலை.

ஆரம் தாழ்ந்த அணிகிளிர் மார்பின்,
தாள்தோய் தடக்கைத், தகைமாண் வழுதி!
வல்லை மன்ற, நீநயந் தளித்தல்!
தேற்றாய், பெரும! பொய்யே; என்றும்
காய்சினம் தவிராது கடல்ஊர்பு எழுதரும் . . . . [05]

ஞாயிறு அனையை, நின் பகைவர்க்குத்;
திங்கள் அனையை, எம்ம னோர்க்கே.

பொருளுரை:

நன்மாறன் சித்திரமாடம் என்னுமிடத்தில் துஞ்சியவன், புலவர் அவனை வாழ்த்துகிறார், மார்பில் முத்தாரம் அணிந்தவன், அவன் கை அவனது முழந்தாள் வரை நீண்டிருக்கும், தகைமைப் பண்பு மிக்கவன், விருப்பத்துடன் கொடை வழங்குபவன், தெளிவில்லாமல் யாராயிருந்தாலும் வழங்குபவன், யாருக்கும் வழங்காமல் இருந்ததில்லை (பொய் தேற்றாதவன்), அவனது பகைவர்க்குச் சுட்டெரிக்கும் சினத்துடன் கடலில் தோன்றும் ஞாயிறு போன்றவன், மற்றவர்களுக்கு குளுமையான ஒளி தரும் நிலா போன்றவன்.